லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு தொடர்ந்து இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் தானம் கொடுத்தால்.

cow
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எவ்வளவோ கஷ்டப்படுவோம். எவ்வளவோ சம்பாதிப்போம். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு போட்டு பணத்தை சேமித்து வைப்போம். ஆனால் கடைசியில் அந்த பணம் கடனை திருப்பிக் கொடுக்க பயன்படாது. வேறு ஏதாவது செலவுக்கு போய்விடும். இப்படி கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் வட்டி கொடுத்து கஷ்டப்படக்கூடிய நிறைய பேர் இருக்கிறார்கள். வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, ஒரு லட்ச ரூபாய் வட்டி கட்டியிருப்பாங்க. ஆனால் அந்த அசல் தொகை ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வரக்கூடிய வருமானத்தை சரியான முறையில் சேமித்து, கடனை திருப்பித் தருவதற்கு ஒரு பரிகாரம் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம்.

கடன் தீர பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டிய தானம்:
மகாலட்சுமி நமக்கு வருமானமாக கொடுக்கக்கூடிய பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆதரவற்ற இல்லங்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யலாம். வீதியில் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யலாம். இந்த தானத்தை எல்லாம் பணமாக செய்யாமல் உணவாக செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகின்றோம். ஒருவேளை பசியை நம்மால் தாங்க முடியுமா. நிச்சயமாக தாங்க முடியாது. ஒருவேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த பசியை போக்கி, நீங்கள் அன்னதானம் செய்தால் அந்த புண்ணியம் உங்களது பல தலைமுறையை காக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இது மட்டுமல்லாமல் முப்பது முக்கோடி தேவர்கள் வாழக்கூடிய ஒரு உயிரினம் தான் பசு. இந்த பசுவை மகாலட்சுமிக்கு இணையாக நாம் பார்க்கின்றோம். நம்முடைய இந்து சாஸ்திரப்படி பசுவை பார்த்தால் நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டியது நம்முடைய தாத்பரியம். இதன் அடிப்படையில் பசு மாட்டிற்கு உங்கள் கைகளால் எள்ளு புண்ணாக்கு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். மாட்டுத்தீவனம் விற்கக்கூடிய இடங்களிலும் எள்ளு புண்ணாக்கு விற்கும். பசு மாட்டிற்கு தீவனத்தில் இந்த எள்ளு புண்ணாக்கை ஒரு குறிப்பிட்ட அளவு சேர்த்து கரைத்து வைப்பார்கள். பசுமாடு வைத்திருப்பவர்களுக்கோ, அல்லது கோவிலில் கோ சாலைகள் இருக்கும் பசு மாட்டிற்கோ நீங்கள் இந்த எள்ளு தீவனத்தை வாங்கி தானமாக கொடுப்பது உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

ஏதாவது ஜாதக ரீதியாக தோஷம் இருக்கிறது. உங்களை கடனாளியாக கூடிய நேரம் உங்களுக்கு இருக்கிறது எனும் பட்சத்தில் கூட அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். உங்களால் எந்த அளவுக்கு வாங்கி கொடுக்க முடியுமோ இந்த எள்ளு புண்ணாக்கு வாங்கி உங்கள் கைகளால் அந்த பசுவை பராமரிப்பவர்கள் கையில் கொடுத்து விட்டால் அவர்கள் அதை தினம் தினம் பசு மாட்டிற்கு தேவையான அளவு கொடுத்து வருவார்கள்.

இதையும் படிக்கலாமே: அம்மனின் அருள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் இதையெல்லாம் மட்டும் தவறாமல் செய்து விட்டால் போதும். அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வது உறுதி.

அந்த பசு மாடு நீங்கள் வாங்கி கொடுத்த தீவனத்தை சாப்பிட சாப்பிட உங்களுடைய கடன் படிப்படியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ந்து இந்த தானத்தை செய்து வர வேண்டும் ஒருமுறை பரிகாரத்தை செய்து பலனை எதிர்பார்ப்பது தவறு.) உங்களுக்கு ஒரு வேலை கடனே ஒரு ரூபாய் கூட இல்லை. ஆனால் இப்போது கெட்ட நேரம் நடக்கிறது. கையில் இருக்கும் பணம் எல்லாம் வீண் விரயமாக கூடிய நேரம் என்றாலும் அதை தவிர்க்க கூடிய சக்தியும் இந்த பரிகாரத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -