கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைக்கு மூன்றே நாளில் தீர்வு கிடைக்க, இந்த 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும்.

amavasai-lemon
- Advertisement -

கடன் நிச்சயமாக ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடாது. நிம்மதியாக சாப்பிட விடாது. நிம்மதியாக தூங்க விடாது. இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் இந்த கடனை, கைநீட்டி நாம் வாங்காமல் இருப்பது நல்லது. சூழ்நிலை காரணமாக, கெட்ட நேரம் காரணமாக கடன் வாங்கும் சந்தர்ப்பத்தில் நாம் தள்ளிவிடப்படுகின்றோம். கடன் கைநீட்டி வாங்கி விடுகின்றோம். அவசரத்துக்கு கடனை வாங்கும் போது வட்டி நம் கண்ணுக்கு தெரியாது. எவ்வளவு வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கும் கடன், நம்மை வட்டிகட்ட வைத்து வாழ விடாமல் செய்துவிடும். ஆகவே கைநீட்டி கடன் வாங்கும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள் வேறு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று பாருங்கள். கடன் வாங்கி காலம் முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்காதீர்கள்.

கைநீட்டி கடன் வாங்கி ஆகிவிட்டது. வட்டியும் கட்டிக் கொண்டு வருகின்றோம். அசலை திருப்பித் தர முடியவில்லை. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து எப்படித்தான் வெளிவருவது என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான குறிப்பு இதோ. முதலில் ஒரு எலுமிச்சம் பழம் வாங்கிக் கொள்ளுங்கள். கடையிலிருந்து புதுசாக கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழமாக வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து, மஞ்சள் தண்ணீரில் அந்த பழத்தை கழுவி ஈரத்தை துடைத்து விடுங்கள்.

- Advertisement -

கடன் பிரச்சனை தீர எலுமிச்சை பரிகாரம்
இன்று செவ்வாய்க்கிழமை. இன்று மாலை 4.30-6.00 ராகு கால நேரம். துர்க்கை அம்மனுக்கு மிகவும் சிறப்பான நேரம். இந்த ராகு கால நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த பழத்தை வைத்து, மனதார உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மனமுருக நம்பிக்கையோடு வேண்டுதல் வைக்க வேண்டும். நேர்மறையாக வேண்டிக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

இன்று இரவு முதல் 20, 21, 22 இந்த மூன்று நாட்களும் இந்த எலுமிச்சம் பழத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். 23ஆம் தேதி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் இரவு 9 மணிக்கு மேல், தலையணைக்கு அடியில் வைத்து படுத்த அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி தூக்கி கால் படாத இடத்தில் தூர போட்டு விடுங்கள். சாக்கடையில் போடக்கூடாது.

- Advertisement -

வெளிப்புறங்களில் உங்களால் போட முடியவில்லை என்றால் ஒரு பேப்பரில் மடித்து குப்பை கூடையிலேயே அந்த பழத்தை போட்டு விடலாம். உங்களை பிடித்து ஆட்டிப் பிடைக்கும் கடன் பிரச்சனை பீடை தரித்திரம். கஷ்டம் அனைத்தும் உங்களை விட்டு சென்றுவிடும். இந்த பரிகாரத்தை செய்யும் போதும் இந்த பழத்தை உங்கள் தலையை சுற்றும் போதும் துர்க்கை அம்பாளையும், குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்களிடம் இந்த ஒரு குணம் மட்டும் இருக்கவே கூடாது, அது அவர்களை தீராத துன்பத்தில் தள்ளுவதோடு, குடும்பத்திலும் பிரச்சினைகளை உண்டாக்கும்.

நேர்மறை எண்ணத்தோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் தீருவது உறுதி. கடன் பிரச்சனை இல்லை வேறு ஏதாவது பெரிய கஷ்டமாக இருக்கிறது என்றால், அதை சரி செய்யவும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -