மாதத்தில் இந்த 2 நாட்கள் மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் வாழ்வில் கடன் தொல்லையே இருக்காது. இருக்கின்ற கடனை கூட சீக்கிரம் திருப்பி கொடுத்து விடலாம்.

oil-bath
- Advertisement -

பூமியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதத்தில் கடன் பிரச்சனை இருக்கின்றது. பெரிய பெரிய கடன் பிரச்சனையால் உயிரை விட்டவர்கள் கூட ஏராளமானோர் உள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த கடன் பிரச்சனை கொடுமையான ஒரு விஷயம். கடனை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களிடம் கேட்டால்தான் தெரியும், இந்த கடன் எவ்வளவு பெரிய ஒரு கொடிய நோய் என்பது. இப்படிப்பட்ட கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு சிறந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மிக மிக எளிமையான பரிகாரம் இது.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்வில் செல்வ வளம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் கடன் பிரச்சனையும் படிப்படியாக குறையும். மீண்டும் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலையை நமக்கு இது ஏற்படுத்தி விடும். எந்தெந்த நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தால் வாழ்வு வளம் பெறும் என்பதை பார்க்கலாமா.

- Advertisement -

மாதத்தில் இரண்டு நாட்கள் வளர்பிறை தசமி, தேய்பிறை தசமி திதி வரும். இந்த இரண்டு நாட்களையும் காலண்டரில் பார்த்தால் நாம் கண்டுபிடித்து விடலாம். இந்த இரண்டு நாட்களிலும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக மிக நல்லது. இந்த இரண்டு நாட்களில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுக்கு படிப்படியாக கடன் சுமை குறையும் வருமானம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். ஆண்கள் சனிக்கிழமை புதன்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. தசமி திதி வேறு கிழமையில் மாறி வந்துவிட்டது. உதாரணத்திற்கு சனிக்கிழமை தசமி திதி வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களுக்கு பிரச்சனை இல்லை. நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விடலாம். இப்போது இந்த சனிக்கிழமை தசமி திதி வரும் போது பெண்கள் என்ன செய்வது.

- Advertisement -

கொஞ்சமாக நல்லெண்ணெயில் இரண்டு சொட்டு நெய்யை விட்டு கலந்து அந்த எண்ணெயை தேய்த்து பெண்கள் குளித்து விடலாம். நல்லெண்ணையில் நெய் கலக்கும் போது அதில் இருக்கும் தோஷம் விலகி விடும். பெண்கள் சனிக்கிழமை தசமி திதி வந்தாலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் பிரச்சனை வராது.

வெள்ளிக்கிழமை தசமி திதி வந்துவிட்டது. பெண்கள் சாதாரணமாக நல்லெண்ணெய் வைத்து தலைப்பு குளித்துக் கொள்ளலாம் வெள்ளிக்கிழமை பிரச்சினை கிடையாது ஆனால், ஆண்கள் எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது. நல்லெண்ணையில் இரண்டு சொட்டு நெய் விட்டு அதை தலையில் தேய்த்து ஆண்கள் குளித்துக் கொள்ளலாம். அப்போது ஆண்களுக்கும் எந்த தோஷமும் கிடையாது. எந்த கிழமையாக இருந்தாலும் சரி தசமி திதி வரும்போது அந்த கிழமையை கணக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். நல்லெண்ணையில் நெய் கலந்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு புரிந்ததா. ஆண்கள் சனிக்கிழமை புதன்கிழமை தசமி திதி வரும்போது வெறும் நல்லெண்ணையை தலைக்கு வைத்து குளித்துக் கொள்ளலாம். பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று செவ்வாய்க்கிழமை அன்றும் தசமி திதி வரும் போது வெறும் நல்லெண்ணெயை வைத்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. ஆண்களும் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாத நாட்களில் தசமி திதி வரும் போது, மேலே சொன்ன நல்லெண்ணையோடு நெய் கலக்கக்கூடிய பரிகாரத்தை பின்பற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

முழுக்க முழுக்க உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணெயை பூசி குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இரண்டு சொட்டு நல்லெண்ணையை தலையில் வையுங்கள். கொஞ்சம் லேசாக நல்லெண்ணெயை உடம்பு முழுவதும் பூசி கூட குளித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -