கடன் அடைய கோதுமை பரிகாரம்

wheat cash
- Advertisement -

கடனை யாரும் விரும்பி ஆசைப்பட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாமல் நாம் கடன் வாங்கி விடுவோம். கடன் வாங்கும் போது அதை அடைக்கும் வழிகளை யோசித்து தான் வாங்குவோம். ஆனால் அடைக்க முடியாத அளவிற்கு நமக்கு பிரச்சனைகள் தொடரும்.

சில நேரங்களில் ஒரு சிலரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கான வாய்ப்பே ஏற்படாமல் போகும். இப்படி கடனை வாங்கி அடக்க முடியாமல் இன்றளவும் திணறுபவர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்கான ஒரு எளிய பரிசோதனை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்படுகிறது.

- Advertisement -

கடனடைய கோதுமை பரிகாரம்

ஒவ்வொருவரும் கடன் வாங்குவதற்கு முன்பு நிச்சயமாக பலமுறை யோசிக்க வேண்டும். இந்த கடனை வாங்க வேண்டுமா? வாங்கினால் அடைக்க முடியுமா? என்பதை யோசித்து தான் வாங்க வேண்டும். இன்னும் ஒரு சிலரோ ஆடம்பர தேவைகளுக்காக கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். அப்படியானவர்கள் எப்போதும் கடனில் தான் இருப்பார்கள். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி ஏதோ ஒரு தேவைக்கு கடன் வாங்கி விட்டோம் அதை அடைக்க முடியவில்லை இப்போது என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதற்கு சிறிதளவு கோதுமையை தானியமாக வீட்டில் வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் எழுந்து கொடுத்து முடித்த பிறகு நீங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் நின்று கொள்ளுங்கள். கையில் ஒரு பிடி கோதுமையை வைத்துக் கொண்டு நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அந்த கடன் தொகை எவ்வளவோ அதை மனதில் நினைத்து கொண்டு அது விரைவில் அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டிற்கு வெளியில் வந்து அந்த கோதுமையை யாருக்காவது தானமாக கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

இப்படி கொடுக்கும் போது மற்றவர்கள் வாங்குவது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் ஏதேனும் ஒன்று சொல்லி கொடுத்து விடுங்கள். ஆனால் இந்த பரிகாரத்தை செய்த காரணத்தை சொல்லக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இந்த பரிகாரத்தை 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்களுக்கு இடையில் மாதவிலக்கு தொந்தரவு ஏற்பட்டாலும் பரவாயில்லை செய்யலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் செய்வதால் அசைவம் சாப்பிடக் கூடாதா என்ற கவலை எல்லாம் வேண்டாம். இந்த பரிகாரத்தை காலை செய்து விட்டு, நீங்கள் எப்போதும் போல அன்றைய நாளை தொடரலாம். ஆனால் 16 நாட்களில் ஒரு நாள் இதைத் தவிர விட்டாலும் மீண்டும் 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர பங்குனி உத்திர வழிபாடு

16 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள்ளாகவே நீங்கள் நினைத்த கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடனை அடைக்கும் வழியை தேடி கொள்ளுங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -