கடன் அடைய கோதுமை பரிகாரம்

hanuman cash
- Advertisement -

பக்தர்களின் குறை தீர்க்கவே தன்னுடைய தேவலோக பதவியே வேண்டாம் என்று பூவுலகில் மனிதர்களுக்காக வாழும் அற்புதமான ராம பக்தர் தான் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படியான இந்த ஆஞ்சநேயரை அனைவரும் தங்களுடைய குடும்பத்தில் உள்ள துன்பங்கள் தீரவும் குழந்தைகள் படிப்பில் முன்னேறவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் வழிபடுவது வழக்கம்.

நம்முடைய வாழ்க்கையில் பெருந்துயரை ஏற்படுத்தக் கூடிய கடன் தொல்லையிலிருந்து வெளிப்படவும் ஆஞ்சநேயரை வழிபடலாம். அதற்கு எந்த முறையில் ஆஞ்சநேயரை வணங்க வேண்டும் எப்படி வணங்க வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஆலயத்திலும் செய்யலாம் வீட்டிலும் செய்யலாம் ஆனால் வீட்டில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்கான காரணத்தை பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாடு செய்வதற்கு ஆஞ்சநேயர் திருவுருவப்படம் நிச்சயமாக தேவை. வீட்டில் படம் இல்லாதவர்கள் வாங்கி விடுங்கள்.

அதே போல் இந்த வழிபாஙடை இந்த நாளில் தான் துவங்க வேண்டும் என்று கிடையாது. எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கலாம். இதை துவங்கும் நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் அல்லது அன்றைய நாள் உங்களுக்கு எப்படி உள்ளது என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு நீங்கள் ஆஞ்சநேயருக்கு ஒரு நெய்வேத்தியத்தை தயார் செய்ய வேண்டும் அது தான் முக்கியம்.

- Advertisement -

கோதுமை மாவை வாங்கி நீங்களே அரைத்து கொள்ளுங்கள். இந்த கோதுமை மாவுடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து பூரி சுட வேண்டும். இந்த பூரி உங்களின் உள்ளங்கை அளவு இருந்தால் போதும். அதற்கு மேல் பெரிதாக இருக்கக் கூடாது. ஆஞ்சநேயர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து துளசி மாலை அல்லது உங்களால் முடிந்த வேறு ஏதும் ஒரு பூக்களை வைத்து விடுங்கள்.

ஆஞ்சநேயர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி விட்டு இந்த நெய்வேத்தியத்தை ஆஞ்சநேயருக்கு படைத்து விடுங்கள். அதன் பிறகு ஆஞ்சநேயர் மூன்று அமர்ந்து உங்கள் கடன் தொல்லை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் அல்லது அனுமன் ஷாலிசா படிக்கலாம். பூஜை முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர் அனைவரும் பகிர்ந்து சாப்பிடுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை கோவிலிலும் செய்யலாம் ஆனால் தினம் தோறும் எல்லோராலும் தினமும் கோவிலுக்கு சென்று இந்த வழிபாடு செய்ய முடியாது. ஆகையால் வீட்டிலே படம் வைத்து இது போல செய்யுங்கள். ஒருவேளை உங்களால் கோவிலில் செய்ய முடியும் என்றால் கோவிலில் வைத்து படைக்கப்படும் நெய்வேத்தியத்தை கோவிலில் உள்ளவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்

இந்த முறையில் தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடும் போது உங்களின் தீராத கடன் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக தீர்வதை நிச்சயமாக உணருவீர்கள். கடன் தீருவதற்கான வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும் அதை பயன்படுத்தி கடன் இல்லாத பெருவாழ்வை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -