வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இரண்டு நாளை மட்டும் இப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் இனி கடன் வாங்க வேண்டிய அவசியமே வராது.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எதுவென்றால் ஒரே வார்த்தையில் கடன் என்று சொல்லி விடலாம். கடன் வாங்கி விட்டு சின்னாபின்னமான குடும்பங்களின் பட்டியல் வெகு நீளம். இந்தக் கடனை யாரும் விருப்பப்பட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு நம்முடைய கர்மாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. கடன் வாங்கி அவதிப்படுவதில் கூட நம்முடைய கர்ம வினைகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அப்படி நாம் கடன் வாங்கி அடைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், ஒரு சில நாட்களில் நாம் வாங்கிய கடலில் சிறிதேனும் கொடுத்தால் கூட அந்த கடன் பெருமளவு அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த நாள் எப்படி அதை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் ஆன்மீகம் இந்த குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடனை திருப்பி அடைக்க வேண்டிய நாட்கள்:
பொதுவாக கடன் வாங்கும் பொழுதே நாம் நாள் கிழமை நேரம் எல்லாம் பார்த்து வாங்குவது மிகவும் உகந்தது. ஏனென்றால் சில நேரங்களில் சில நாட்களில் வாங்கும் கடன் ஆனது நம்மை மேலும் மேலும் கடன்காரர்களாக ஆக்குமே அன்றி அந்த கடனிலிருந்து நம்மால் வெளிவரவே முடியாது. குறிப்பாக குளிகை நேரத்தில் கடன் வாங்கக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே போல் தான் செவ்வாய் சனிக்கிழமைகளிலும் கடன் வாங்க கூடாது.

horai

செவ்வாய் சனி இந்த இரண்டு நாட்களிலும் நாம் எந்த காரியம் செய்தாலும் அது பெருக்கம் விரிவாக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் அந்த நாட்களில் நீங்கள் கடன் வாங்கி விட்டால் நிச்சயமாக கடனிலிருந்து வெளி வரவே முடியாது. ஆகையால் முடிந்த அளவு இந்த இரு நாட்களில் கடன் வாங்குவது தவிர்த்து விடுவது நல்லது.
அப்படியானால் கடனை அடைக்க கூடிய நாட்கள் எது என்று கேள்வி உங்களுக்கு எழலாம். எந்த நாளில் நாம் கடனை வாங்க கூடாதோ அதே நாளில் தான் கடனை அடைக்க வேண்டும். ஆமாம் செவ்வாய் சனி இந்த இரண்டு நாளில் கடனை அடைப்பது கடன் விரைவில் அடைவதற்கான வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஏனெனில் கடன் வாங்கும் பொழுது எப்படி அது பெருக்கமோ அதே போல் கடனை அடைப்பதும் இந்த நாட்களில் பெருக்கம் அப்படியானால் நம்முடைய கடன் விரைவில் அடையும் தானே.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் கடனை அடைக்க முடிந்தால் மிக மிக விசேஷம். அதே போல் சனிக்கிழமைகளிலும் சனி ஹோரையில் கடன் அடைத்தால் இனி வாழ்க்கையில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை கூட ஏற்படாது. செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை காலை 6 முதல் 7, மதியம் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 இதே நேரங்களில் சனிக்கிழமைகளும் சனி ஹோரை வரும் இந்த இரண்டு நேரங்களை சரியாக பயன்படுத்தி கொண்டால் கடன் அடைந்து கடன் இல்லா வாழ்க்கை வாழலாம்.

இதையும் படிக்கலாமே: சிவ சிவ! தூங்கி எழுந்தவுடன் உங்கள் தலை மேல் இருக்கும் எல்லா பிரச்சனையும் சரியாக வேண்டுமா? தூங்கும் போது தலைக்கு மேலே இதை மட்டும் வைத்து தூங்குங்க போதும்.

எத்தனை கோடி கடனாக இருந்தாலும் இந்த நாட்களில் இந்த நேரங்களில் ஒரு சிறிய தொகையாவது நீங்கள் கடனை திருப்பி விடுங்கள். கட்டாயம் எத்தனை பெரிய கடனும் அடைவதற்கான வழி கிடைக்கும். கடன் அடைய வேண்டும் என்றால் வருமானம் வர வேண்டும். அதற்கான வாய்ப்பும் இந்த ஹோரைரைகளும் நேரங்களும் உங்களுக்கு உருவாக்கித் தரும். இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் உங்கள் கடனில் ஒரு சிறிய தொகை எனும் இந்த நேரத்தில் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
.

- Advertisement -