தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வாருங்கள்

powrnami
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக இருந்தாலும் இந்த மாதத்தில் அதனை செய்வது மிகுந்த விசேஷ பலனைக் கொடுக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் சிவபெருமான் தனது பக்தர் ஒருவருக்கு திதி கொடுத்துள்ளார் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே முன்னோர்கள் நமது தர்பனத்தை ஏற்றுக் கொண்டு9 அவர்களின் ஆசீர்வாதத்தை மனதார அருள்வார்கள். அவ்வாறு ஒரு சில விசேஷ பூஜைகள் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தரித்திரம், பணக் கஷ்டம் போன்றவற்றை அகற்றி அதிர்ஷ்டத்தை கொண்டுவர முடியும். அதற்கான பூஜை என்னவென்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புதிதாக தொழில் துவங்குவது, திருமணம், புதிதாக நிலம் வாங்குதல், வீடுகட்டுதல் இது போன்ற சுப காரியங்களை துவங்குவதாக இருந்தால் இந்த பவுர்ணமி தினத்தில் சத்யநாராயண பூஜை செய்வது மிகவும் விசேஷத்தை கொடுக்கிறது. அவ்வாறு விளக்கு பூஜை, குலதெய்வ பூஜை, அம்பிகை வழிபாடு இது போன்ற சிறப்பு வாய்ந்த பூஜைகளை பவுர்ணமி அன்று செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெற முடியும்.

- Advertisement -

ஏனென்றால் பௌர்ணமி தினத்தன்று சந்திரன் முழு பிரகாசத்துடன் இருக்கும். அன்றைய தினம் இந்த பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே சந்திரன் மேலெழும்பி முழுவதுமாக பிரகாசிக்க ஆரம்பித்தவுடன், சில பூஜைகளை வீட்டில் செய்வதன் மூலம் தரித்ரங்கள் அனைத்தும் விலகி ஐஸ்வர்யம் பெருகும்.

அதற்காக முதலில் ஒரு கலசத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு செம்பு அல்லது பித்தளையினாலான ஒரு கலச சொம்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். அடுத்ததாக தேங்காய் ஒன்றை எடுத்து, அதனையும் சுத்தமாக கழுவி, மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு தலைக்குத் தண்ணீர் மட்டும் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஊற்றிக்கொள்ள வேண்டும் பிறகு அதில் ஒரு பதில்கூட கிராம்பு ஏலக்காய் சிறிதளவு வா தலைவா வளர்வதற்கும் ஒரு ரூபாய் நாணயம் இவை அனைத்தையும் செய்து கொள்ள வேண்டும் பிறகு இதன் மீது வெற்றிலை வைத்து, அதன்மீது தேங்காயை வைக்க வேண்டும்.

பிறகு இதற்கு மலர் மாலை சூட்ட வேண்டும். பின்னர் இந்த கலசத்தை பூஜை அறையின் முன்பு வைத்து விட்டு, பழங்கள் அல்லது ஏதாவது நெய்வேத்தியம் செய்து படைக்க வேண்டும். பிறகு இந்த கலசத்திற்கு தீப, தூய ஆராதனை காண்பித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை மூன்று பௌர்ணமிகள் தொடர்ந்து செய்துவர உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து நடப்பவை அனைத்தும் நன்மையாக மாறும்.

- Advertisement -