தீராத கடன் தொல்லை தீர கைப்பிடி கொள்ளு போதும்.

kollu cash
- Advertisement -

கடன் என்று சொன்னாலே அதன் வீரியம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இன்று இந்த கடனால் காணாமல் போன குடும்பங்கள் எத்தனையோ எத்தனை. இன்றளவும் ஒவ்வொரு நாளும் இந்த கடன் பிரச்சனையால் எங்கேயும் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியான கடனை அடைக்க ஒரு எளிய பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் சொல்வது போல தான் கடன் என்பது மிகப் பெரிய சுமை. அதை நாம் சுமக்க தயாராவதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும். நாம் வாங்கும் கடன் யாரிடம் வாங்குகிறோம் எதற்காக வாங்குகிறோம் திரும்ப கொடுப்பதற்கான சூழ்நிலை அனைத்தையும் பல முறை யோசிக்க வேண்டும். இதையும் மீறி சமய சந்தர்ப்பத்தால் சில நேரங்களில் கடன் வாங்க வேண்டியது இருக்கும். அதை தவிர்க்க முடியாது.

- Advertisement -

அப்படி வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் திணறும் சமயத்தில் இது போன்ற எளிய பரிகாரங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும். ஏனெனில் கடனால் அவதிப்படுவதும் நம்முடைய கர்மா என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதை தீர்ப்பதற்கான எளிய தான பரிகாரத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர கொள்ளு தானம்

கடன் தீர எத்தனையோ வகை பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதுவும் மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். இந்தக் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் தொடங்க வேண்டும்.

- Advertisement -

அன்று உங்கள் கை நிறைய ஒரு கைப்பிடி அளவு கொள்ளு தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஊற வைக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. அப்படியே எடுத்து சிறிது நேரம் உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு யாரிடம் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களோ எந்த கடனால் துன்பப்படுகிறீர்களோ அதை விரைவில் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த தானியத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஜீவா ராசிகளுக்கு கொடுங்கள். ஆடு மாடு ஒரு வேளை உங்கள் வீட்டின் அருகில் குதிரை இருந்தால் அதற்கும் கொடுக்கலாம். இதே போல 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதை இடையில் ஒரு நாள் தவற விட்டாலும் மறுபடியும் முதலில் இருந்து 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருஷ்டி பூசணிக்காயை உடைக்கும் சரியான முறை

கடன் தீர செய்ய வேண்டிய இந்த எளிய தானிய தான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யலாம். அதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -