கடன் கரைந்து போக கிராம்பு மாலையை இந்த செடியின் மேல் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள். எதிர்பாராத பண பலமும், அதிர்ஷ்டமும் உங்கள் வீட்டு கதவைத் தட்டும்.

kadan
- Advertisement -

சுமக்க முடியாத கடன் பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தால் தான் உண்டு. ஒரே நாளில் சம்பாதித்து எல்லாம் தலைக்கு மேல் இருக்கக் கூடிய கடனை நம்மால் அடைக்க முடியாது. எதிர்பாராமல் ஒரு ஜாக்பாட் அடித்தால் வேண்டுமென்றால் சமாளித்துக் கொள்ளலாம். எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய சுலபமான சக்திவாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மனப்பூர்வமாக இந்த பரிகாரத்தை செய்தால், என்னுடைய கடன் சுமை குறையும், கடன் பாரம் குறையும், நான் கடனை அடைத்து விடுவேன், என்று நேர்மறையாக நினைத்துக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப அடுத்த ஒரு சில நாட்களில் கடன் சீக்கிரம் அடையும்.

இதற்கு நமக்கு முதலில் 27 கிராம்பு தேவை. அந்த 27 கிராம்பையும் முதலில் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ‘என்னுடைய கடன் அடையும். கடன் அடைய தேவையான பணம் எனக்கு கிடைக்கும். அந்த பணத்தை இந்த பிரபஞ்சம் கூடிய சீக்கிரத்தில் என் கையில் கொண்டுவந்து சேர்க்கும். என்று மனதார உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’.

- Advertisement -

அதன் பின்பு கையிலிருக்கும் கிராம்பை தரையில் வைத்து விடக்கூடாது. ஏதாவது ஒரு எச்சில் படாத கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிகப்பு நிற நூலை எடுத்துக் கொண்டு, இந்த கிராம்பை ஒவ்வொன்றாக எடுத்து பூ கட்டுவது போல கட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கிராம்பை எடுத்துக் காட்டும் போதும், என்னுடைய கடன் சீக்கிரம் தீரும் அப்படின்னு சொல்லிட்டு கட்டுங்க.

தயார் செய்த இந்த மாலையையும் எக்காரணத்தைக் கொண்டும் தரையில் வைத்து விடக்கூடாது. உங்களுடைய வீட்டில் துளசி செடி இருந்தால் அந்த துளசி மாதாவுக்கு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார துளசி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு நீங்கள் கட்டி வைத்திருக்கும் இந்த துளசி மாலையை, அந்த துளசி செடிக்கு போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு செய்வது மிக மிக சிறப்பு வாய்ந்தது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் துளசி செடி இல்லை என்றால் என்ன செய்வது. உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது கோவிலில் துளசி செடி இருந்தால் அந்த செடிக்கு மேலே இந்த கிராம்பு மாலையை போடலாம்.

அப்படி இல்லை என்றால், கடையிலிருந்து துளசி இலைகளை கொஞ்சம் நிறைய வாங்கிக் கொள்ளுங்கள். அந்த துளசி இலைகளைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து, அந்த இலைக்கு மேலே இந்த கிராம்பு மாலையை போட்டு வைக்கலாம். இரண்டு நாட்கள் கழித்து துளசி வாடிய பின்பு கிராம்பு மாலையையும் துளசியையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். வீட்டு செடியில் இந்த மாலையை போட்டால் திரும்பவும் எடுக்க வேண்டாம். அந்த மாலை அப்படியே மண்ணில் விழுந்துவிடும்.

ஒரு வாரம் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பக்கம் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்களுடைய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு ஏதாவது ஒரு வாய்ப்பை அந்த ஆண்டவன் உங்களுக்கு காண்பித்து கொடுப்பான். நம்பிக்கையுள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -