கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? இந்தக் கிராம்பு மாலை பரிகாரம் செய்து பாருங்கள். விரைவில் உங்கள் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்

krambu
- Advertisement -

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு தான். அவ்வாறு வீட்டில் ஏதேனும் சாபம் செய்வதாக இருந்தாலும் முதலில் ஒரு கலசம் வைக்கப்படுகிறது. அதில் நீர் நிறைத்து கொண்டு, அதனுடன் சில பொருட்கள் போடப்படுகின்றன. அவற்றில் முதலாவதாக இருப்பது இந்த கிராம்பு தான். இந்த கிராமிபிற்க்கு பொதுவாகவே நேர்மறை அதிர்வுகளை உட்கிரகிக்கும் திறன் உள்ளது. இதனை வைத்து பூஜை செய்வதன் மூலம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த கிராம்பு வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

mahalakshmi

கலசத்தில் நீர் நிறைத்து வைப்பதென்பது வருண பகவானை வணங்குபவதற்க்கு ஈடாகும். இந்த தண்ணீரில் கிராம்பு சேர்ப்பதன் மூலம் சொல்லப்படும் மந்திரங்களை இவை உட்கிரகித்துக் கொள்கின்றன. பிறகு இந்த தான் உட்கிரகித்த ஆன்மீக நேர்மறை அதிர்வுகளை நீரில் கரைய விடுகின்றன. எனவே தான் இந்த தீர்த்தத்தை பருகுவதன் மூலமாக உடம்பில் இருக்கும் நோய்கள் தீர்கின்றன. இதனை வீட்டில் தளிப்பதன் மூலமாகவும், முகம் கழுவுவதன் மூலமாகவும் வீட்டில் நிறைந்திருக்கும் எதிர் மறை சக்திகள் அழிந்து லட்சுமி கடாட்சம் உண்டாகிறது.

- Advertisement -

இந்த கிராம்பிற்கு நமது வார்த்தைகளை உள்வாங்கும் திறன் உள்ளதால் நமது வேண்டுதலை இவற்றின் மூலம் கடவுளுக்கு மிகவும் அருகில் கொண்டு செல்ல முடியும். எனவே இந்தப் பரிகாரம் செய்வதற்கு முதலில் நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது மளிகை கடைகளிலோ கிராம்பு வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பூ கட்டும் கயிறை பயன்படுத்தி பூ கட்டுவது போல மேற்புறம் ஒரு கிராம்பு கீழ்புறம் ஒரு கிராம்பு என வைத்துக் கொண்டு முடிச்சு போட வேண்டும். இவ்வாறு 108 முடிச்சுகள் போட வேண்டும்.

krambu

இவ்வாறு ஒவ்வொரு முடிச்சு போடும் பொழுதும் உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கடன் பிரச்சனை தீர வேண்டுமென்றால் எனது கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று ஒவ்வொரு முடிச்சு போடும் பொழுது மனதிற்குள் சொல்லிக் கொண்டே வர வேண்டும். இப்படி ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும்தான் அனைத்து முடிச்சிற்க்கும் செல்ல வேண்டும்.

krambu1

கடன் பிரச்சனை, உடல் ஆரோக்கியப் பிரச்சினை, சண்டை சச்சரவு, நிலத்தகராறு, வழக்குகள் இதுபோன்ற விஷயங்களுக்கு இந்த கிராம்பு மாலையை கோவிலில் இருக்கும் பாம்பு புத்திற்க்கும் அல்லது சூலாயுதத்திற்க்கும் மாலையாக அணிவிக்க வேண்டும். ஐஸ்வர்யம் உண்டாகவும், சுபிட்சம் கிடைக்கவும், லட்சுமி கடாட்சம் பெருகவும் கிராம்பு மாலையை கோவிலில் இருக்கும் அம்மனுக்கு சாற்ற வேண்டும். அல்லது வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கும் மாலை அணிவித்து, பூஜை செய்து வருவதன் மூலமும் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -