கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து விட்டால் போதும் ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் முழு கடனை நிச்சயம் விரைவில் அடைத்து விடலாம்.

kadan theera
- Advertisement -

கடன் என்னும் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போன குடும்பங்கள் பல்லாயிரம் கணக்கில் உண்டு. கடன் வாங்குவதை யாரும் விரும்பி செய்யும் செயல் கிடையாது. சூழ்நிலை காரணமாகவோ அல்லது வியாபாரம் தொழில் செய்பவர்கள் தங்களின் தொழிலுக்கு முதலீடாகவும் வீடு வாசல் என அமைக்க ஏதேனும் ஒரு தொகையை வாங்கி இருப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய கடன் அனைத்துமே திரும்ப தரக்கூடிய நிலையும் ஏற்படுத்திக் கொண்ட பின் தான் செய்திருப்பார்கள். சூழ்நிலை காரணமாக அதை திருப்பித் தர முடியாமல் போகும் போது பெரும் அளவு பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். இதனால் வாழ்க்கையில் நிம்மதியும் இல்லாமல் போய் விடும்.

அப்படி கோடிக்கணக்கில் கடன் வாங்கி துன்பத்தில் சிக்கியிருந்தாலும் கூட இந்த ஒரு நேரத்தில் கடனில் ஒரு சிறு தொகையாவது கொடுக்கும் போது முழு கடனும் அடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது அப்படியான நேரத்தை குறித்த ஒரு தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கோடிக்கடனும் அடைய பரிகாரம்
பொதுவாகவே கடனை கொடுக்க நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிக் கொடுக்கும் பொழுது அந்த கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் கடன் பிரச்சனைகளில் இருந்து நம்மை முழுமையாக மீட்டுக் கொண்டு வரக்கூடியவர் அங்கார காரகன். அந்த தெய்வத்திற்கான மூலக்கடவுள் முருகர் இவர்கள் இருவருமே கடனிலிருந்து நம்மை விடுவிக்க கூடியவர்கள். இவர்கள் இருவருக்கும் உகந்த நாள் அது செவ்வாய்க்கிழமை. அதுவும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கும் போது கடன் விரைவில் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும்.

இந்த பரிகாரமும் அதே போன்று ஒரு முக்கியமான நேரத்தை குறித்தது தான் இதை செவ்வாய்க்கிழமை மதியம் 12யில் இருந்து 1.30 மணி வரையிலான குளிகை நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனிலிருந்து சிறு தொகையாவது கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் அவர்களுடைய பெயரை ஒரு கவரில் எழுதி வைத்து அதில் இந்த தொகையை போட்டு எடுத்து வைத்து விடுங்கள். இதன் மூலம் கடன் விரைவில் நிச்சயமாக அடைந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த பரிகார முறை கடன் அடைவதற்காக மட்டுமின்றி பணம் சேமிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்தலாம். இந்த நேரத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தில் சேமிப்பை செலுத்தினாலும் அதுவும் பல மடங்கு பெருகக் கூடிய யோகத்தை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது. சீரான பண வரவை கொடுக்கும் சிம்பிளான பரிகாரம்.

பொதுவாக குளிகை நேரத்தில் எந்த செயலை செய்தாலும் அதை திரும்பத் திரும்ப செய்வதற்கான வாய்ப்புகள் பெருகும் என்பது ஓரளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதே குளிகை செவ்வாய்க்கிழமையில் இந்த நேரத்தில் வரும் பொழுது பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய கடன் அடைவதோடு சேமிப்பும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த நேரத்தை தவற விடாமல் பயன்படுத்தி கடன் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -