தீராத கடன் சுமை தீர 1 கைப்பிடி அரிசி இருந்தால் போதும். மகாபெரியவா சொன்ன ஒரு எளிமையான பரிகாரம் உங்களுக்காக.

kaanji-periyava
- Advertisement -

தீராத கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்கள் தொழிலில் முன்னேற்றம் வராமல் நஷ்டத்தை சந்திப்பவர்கள், வீட்டில் இருக்கக் கூடிய கணவர் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை, வருமானம் வரவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், வாழ்க்கையில் முன்னேற நிறைய பணம் சம்பாதிக்க இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். தீராத கஷ்டத்தில் இருப்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை சுலபமாக செய்து விட முடியும். இதற்காக தனியாக நிறைய காசு பணம் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

எதுவுமே இல்லைங்க. தினமும் காலையில் உலையில் அரிசி போடுவதற்காக, அரிசி பானையில் இருந்து அரிசியை எடுப்பீர்கள் அல்லவா. அதிலிருந்து ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து எறும்புப் புற்று இருக்கக்கூடிய இடத்திற்கு போட்டு வர வேண்டும். இதுதான் பரிகாரம். தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சினைக்கும் கூடிய சீக்கிரத்தில் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -

ஒருமுறை தீராத மன கஷ்டத்தில் இருந்த ஒரு பெண்மணி மகாபெரியவா ஆசிரமத்திற்கு, சுவாமிகளை சந்திக்க வந்துள்ளார். அவர் தன்னுடைய கஷ்டத்தை மகா பெரியவா அவர்களிடம் சொல்லி புலம்பிய போது, கஷ்டப்படக் கூடிய அந்த பெண்ணின் துயரத்தை துடைப்பதற்காக மகா பெரியவா இந்த பரிகாரத்தை அவருடைய வாயாலேயே சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த பரிகாரத்தை இத்தனை நாட்கள்தான் செய்ய வேண்டும் என்று கணக்கு வைத்து செய்ய வேண்டாம். உங்களால் வாழ்நாள் முழுவதும் இந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றாலும் தொடர்ந்து செய்து வரலாம். உங்களுடைய குடும்பம் பல தலைமுறைகளுக்கு கஷ்டமே இல்லாமல் வாழ்வாங்கு வாழ இது ஒரு சிறந்த பரிகாரம்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் தினமும் எழுந்து நாம் கண் விழிக்கும் போது பின் சொல்லக்கூடிய விஷயங்களை தினமும் பார்க்க வேண்டும். கண் விழித்ததும் தங்க நாணயத்தை பார்ப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். முடிந்தால் ஒரு சிறிய தங்க நாணயத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் பதிந்திருந்தால் மிகவும் சிறப்பு‌. காலையில் எழுந்தவுடன் அந்த தங்க காயினில் கண்விழித்தால் அது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

வசதிபடைத்தவர்கள் தங்க காயின் வாங்கலாம். வசதி இல்லாதவர்கள் தங்க நாணயம் நிரம்பி இருப்பது போல ஒரு வரைபடத்தை வாங்கி மாட்டிக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் பணம் காசு நிரம்பி இருப்பது போல ஒரு புகைப்படத்தை நீங்கள் படுக்கின்ற அறையில் மாட்டி வைக்கலாம். காலையில் கண்ணைத் திறந்ததும் அந்த பணம் காசு உள்ள புகைப்படத்தில் கண்விழிப்பது மிகவும் சிறப்பான ஒன்று.

இப்படி மகாலட்சுமியின் திருவுருவப்படம், தங்க நாணயம், அல்லது ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடிய புகைப்படம் ஆகியவற்றை நான் கால் நீட்டி படுக்க கூடிய கால் பகுதிக்கு கீழ் உள்ள சுவற்றில் மாட்டி வைக்க கூடாது. நீங்கள் படுப்பதற்கு இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ அல்லது உங்களுக்கு தலைக்கு மேல் பக்கத்தில் தான் இப்படிப்பட்ட சுவாமி படங்களை மாட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வரும் போது நிச்சயமாக உங்களுடைய கடன் சுமை குறைய ஆரம்பிக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -