கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கடனை அடைக்க இது போன்ற அற்புதமான நாள் கிடைக்காது. இன்றைய நாளில் இந்த நேரத்தை தவற விடாமல், இந்த எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

- Advertisement -

கடன் என்னும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தான் அந்த வலியின் வேதனை புரியும். ஒரு சிலரிடம் வாங்கிய கடனாது கர்மாவை போல் நமக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். எத்தனை முயற்சி செய்தாலும் அவர்களின் கடனை அடைக்கவே முடியாது. அப்படி ஆனவர் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்த பரிகாரத்தை செய்து விட்டால், நிச்சயம் அவர்களிடம் வாங்கிய கடன் அடையும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த நேரம் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் எந்த செயலை துவங்குவதாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் சரி அதற்கான கால நேரம் பார்த்து வாங்குவது தான் நம் வழக்கம். அதே போல் தான் இந்த கடனையும் அடைக்க ஒரு சில நேரங்களில் நாம் முயற்சிகளை மேற் கொண்டால், அந்த முயற்சி நமக்கு பன்மடங்கு பலனை கொடுத்து தீர்க்க முடியாத கடனை கூட விரைவில் தீர்க்க உதவி செய்யும். அந்த வகையில் இந்த மைத்ரேய முகூர்த்தம் கடனை அடைக்க ஒரு சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் செய்யும் இந்த எளிய பரிகாரமானது, எப்பேர்ப்பட்ட கடனையும் தீர்த்து விடும் ஆற்றல் கொண்டது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை 1.1.2023 அன்று மதியம் 12. 46 முதல் 2. 34 மணி வரை மைத்ரேய முகூர்த்தமானது இருக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் கடனை அடைக்க வேண்டிய அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

கடன் தீர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் இரண்டு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பசு நெய்யை ஊற்றி பஞ்சுத் திரி போட்டு உங்கள் பூஜை அறையில் தயாராக வைத்து விடுங்கள். இந்த மைத்ரேய முகூர்த்தம் தொடங்கும் நேரத்தில் பூஜையறையில் இந்த இரண்டு விளக்குகளையும் ஏற்றி வைத்த பிறகு, ஒரு மொய்க் கவரை எடுத்துக் கொள்ளுங்கள். மொய்க் கவர் இல்லாத பட்சத்தில் ஒரு பேப்பரை மடித்து கூட கவர் போல செய்து கொள்ளுங்கள். அந்த கவரின் மேல் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள் எவ்வளவு தொகையை வாங்கினீர்கள் என்பதை எழுதி, அதை விரைவில் அடைக்க வேண்டும் என்று எழுதிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இதே போல் யாரிடம் வாங்கினீர்கள், எவ்வளவு வாங்கினீர்கள் என்பதையெல்லாம் எழுதிய பிறகு, மொய் கவரில் பிரியாணி இலை, அத்துடன் பச்சை கற்பூரமும் வைத்து அத்துடன் நீங்கள் கொடுக்க வேண்டிய நபருக்கு, ஒரு நூறு ரூபாயாவது எடுத்து வைத்து விடுங்கள். இதை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த கவரை கொண்டு உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

மைத்ரேய முகூர்த்த நேரத்திலே இந்த பணத்தை வாங்கிய நபரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று வருடத்தின் முதல் நாள் ஆனதால் இன்று நம் கையில் இருந்து பணத்தை கொடுக்கக் கூடாது என்று சிலர் யோசிக்கக் கூடும். ஆகையால் இந்த கவரை பீரோவில் வைத்து அடுத்த நாள் இந்த கவரில் இருக்கும் பணத்தை எடுத்து கடன் வாங்கிய நபரிடம் கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறியும் இந்த 5 பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் வீட்டிற்கு நல்லதல்ல!

இப்படி நீங்கள் செய்து வரும் போது கட்டாயமாக இந்த வருடம் முடிவதற்குள்ளாகவே நீங்கள் வாங்கிய கடன் மொத்தமும் முடிய இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் உங்களுக்கு உதவி புரியும். இதை ஒவ்வொரு மைத்தேரிய முகூர்த்த நேரத்திலும் இந்த கவரிலிலும், பிரியாணி இலையிலும் எழுதி அத்துடன் பணத்தை வைத்து வணங்கிய பிறகு, அந்தப் பணத்தை கடன் வாங்கிய நபரிடம் கொடுத்து வந்தால் நிச்சயம் விரைவில் கடன் அடைவதற்கான வழி உங்களுக்கு கிடைத்து விடும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -