கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

cash2
- Advertisement -

ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும், அடுத்த மாதம் துவங்கும் போதும், கடந்த மாதத்தில் நம்மை தொடர்ந்த கஷ்டங்கள் எல்லாம் அந்த மாதத்தோடு முடிந்து போகட்டும். வரக்கூடிய புது மாதம் நம்முடைய வாழ்க்கையில் நன்மை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.

அந்த வரிசையில் நாளைய தினம் மார்ச் 13ஆம் தேதி, மாசி மாதம் முடிவடைகிறது. மாசி மாதத்தின் கடைசி நாளில் நம் கஷ்டங்கள் நம்மை விட்டு கடந்து போக, செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நம் வீட்டில் கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவரவும், பொல்லாத கண் திருஷ்டியை விரட்டியடிக்கவும், செய்ய வேண்டிய இரண்டு பரிகாரங்கள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாளைய தினம் அதாவது புதன்கிழமை இரவு 9:00 மணிக்கு மேல் செய்யவும். ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகமாக பிரச்சனையைக் கொடுக்கும் கடன் எது, அந்த பிரியாணி இலையின் மேலே எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு ‘சுரேஷிடம் வாங்கிய 1,00,000 ரூபாய் கடன் அடைய வேண்டும்’ என்று எழுதிவிட்டு அந்த பிரியாணியிலேயே உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தையும் இந்த பிரபஞ்சத்தையும் மனதார வேண்டிக் கொண்டு, இந்த கடன் சுமை இந்த மாதத்தோடு என்னை விட்டு விலக வேண்டும் என்று நம்பிக்கையுடன் வேண்டுதல் வைக்கவும். சாதாரணமாக எழுதக்கூடிய பேனா ஸ்கெட்ச் எதில் வேண்டுமென்றாலும் பிரியாணி இலையில் எழுதலாம்.

- Advertisement -

நீல நிறம் அல்லது பச்சை நிறம் பயன்படுத்துங்கள். ஒரு சின்ன அகல் விளக்கில் கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். அந்த நெருப்பில் இந்த பிரியாணி இலையை முழுமையாக பொசுக்கி சாம்பல் ஆக்கி விடுங்கள். இந்த சாம்பலை அப்படியே தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டி விடலாம். பரிகாரம் முடிந்தது. இதை வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்படி செய்யும்போது பங்குனி மாத பிறப்பு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். கஷ்டங்கள் எல்லாம் முடிந்து போன, மாசி மாதத்தோடு முடிந்து போகும்.

கண் திருஷ்டியை கழிக்க பரிகாரம்

ஒரு தாம்பல தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் சிவப்பு வண்ண குங்குமத்தை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் சுண்ணாம்பும் மஞ்சளும் சேர்க்கும்போது சிவப்பு நிறம் நமக்கு கிடைக்கும். வழக்கம்போல ஆலம் கரைப்போம் அல்லவா. அதே போல தான் ஆலம் கரைத்து விட்டு, அதன் மேலே வெற்றிலை வைத்து அதன் மேலே ஒரு கற்பூரத்தை வைத்து, கொளுத்தி விடுங்கள்.

- Advertisement -

இந்த கற்பூரத்தில் ஒரு கிராம்பு மட்டும் சேர்த்துக் கொள்ளவும். இந்த ஆரத்தியை வீட்டில் இருப்பவர்களுக்கு நீங்கள் சுற்ற வேண்டும். நாளைய தினம், இரவு எல்லோரும் தூங்க செல்வதற்கு முன்பு வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து, வீட்டில் இருக்கும் மூத்தவர் இந்த ஆராத்தியை அவர்களுக்கு சுற்றி கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் ஊற்றி விட வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, சிவபெருமானை நினைத்து நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு உறங்கச் செல்லலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் தீர செவ்வாய்க்கிழமை பைரவர் வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்யும் போது, எங்களைப் பிடித்த கஷ்டமும், எங்களை பிடித்த கண் திருஷ்டியும் இன்றோடு தொலைந்து போக வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துக் கொண்டே பரிகாரத்தை செய்யவும். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் மாசி மாதத்தோடு முடிந்து, பிறக்கப் போகும் பங்குனி மாதம் பிரகாசமாக பிறக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -