குடும்ப கஷ்டம் தீர செவ்வாய்க்கிழமை பைரவர் வழிபாடு

bairavar1
- Advertisement -

குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. குடும்பத் தலைவனுக்கும், தலைவிக்கும் ஜாதகத்தை பார்த்தால் ஜோதிடர், அந்த தோஷம் இருக்கிறது, இந்த தோஷம் இருக்கிறது, இந்த பரிகாரம் செய்யணும், அந்த பரிகாரம் செய்யணும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் பிரச்சனை மட்டும் ஓய்ந்த பாடாக தெரியவில்லை.

கையில் இருக்கும் பணம் காசு தான் கரைந்து கொண்டே செல்கிறது. குடும்பத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் தோஷங்கள் விலகவும், ஜாதக கட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகவும், என்ன பரிகாரம் செய்வது. எந்த தெய்வத்தை, எந்த கிழமையில் வணங்குவது. திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வழியை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு காட்டப் போகின்றது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை பைரவர் வழிபாடு

உங்க குடும்பம் தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறதா. மாதத்தில் ஒரு செவ்வாய் கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் காலபைரவர் கோவிலுக்கு செல்லுங்கள். பழமையான சிவன் கோவிலாக இருக்கணும். அங்கு இருக்கக்கூடிய கால பைரவர் சன்னிதானத்திற்கு நல்லெண்ணெயும், விளக்குக்கு போடக்கூடிய பஞ்சு திரியும் தானமாக கொடுக்க வேண்டும்.

1/4 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி தர முடியுமா, தாங்க. 1 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி தர முடியுமா, தாங்க. அது உங்களுடைய நிதி நிலைமையை பொருத்தது. செவ்வாய்க்கிழமை உங்கள் கையால் நல்லெண்ணெயை கால பைரவர் கோவிலுக்கு தானம் கொடுத்தால் வீட்டில் இருக்கும் பெரிய பெரிய கஷ்டங்கள் கூட சாதாரணமாக சரியாகிவிடும். கண்ணுக்குத் தெரியாத தோஷம் ஏதாவது இருந்தாலும் அது நிவர்த்தி ஆகிவிடும்.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். இந்த நல்லெண்ணெயை குருக்களிடம் தானம் கொடுக்கும் போது, ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி விடுங்கள். இந்த நல்லெண்ணெயில் கால பைரவர் சன்னிதானத்தில் விளக்கு போடுங்க சாமின்னு சொல்லிட்டீங்கன்னா போதும். அவர் எந்த எண்ணெயை ஊற்றி காலபைரவர் சன்னிதானத்திற்கு வெளிச்சத்தை கொண்டு வந்தால், உங்களுடைய குடும்பத்திற்கு வெளிச்சம் கிடைத்து விடும்.

குறிப்பாக இரவு நேரத்தில் சன்னிதானத்தில் விளக்கு ஏற்ற இந்த எண்ணெயை பயன்படுத்தி வாங்க. மாதம் தோறும் ஒரு செவ்வாய் கிழமை, உங்களால் எந்த செவ்வாய்க்கிழமை முடியுமோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த தானத்தை கொண்டு போய் பைரவருக்கு கொடுத்து விடுங்கள். தானத்தை கொடுத்துவிட்டு அந்த பைரவரின் சன்னிதானத்திற்கு முன்பாக நீங்கள் அமர வேண்டும். கண்களை மூடி ‘ஓம் காலபைராய நமஹ’என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

கணக்கெல்லாம் வைக்க வேண்டாம் 15 நிமிடம், 20 நிமிடம் தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய மனசு, புத்தி, மூளை, ரத்தம், எல்லாவற்றிலும் காலபைரவர் கலக்க வேண்டும். அந்த அளவுக்கு மனதை ஒருநிலைப்படுத்தி கால பைரவரை நினைத்து தியானம் செய்யும்போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு சக்தி கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: வாழ்வு வளம் பெற விநாயகர் வழிபாடு

அந்த சக்தி வாழ்க்கையில் வரக்கூடிய போராட்டங்களை எதிர்த்து போராட வைக்கும். கஷ்டங்களை அடித்து விரட்ட வைக்கும். பிறகு குடும்பத்தில் சந்தோஷத்தை நிலைக்க வைக்கும். முயற்சி செய்து பாருங்களேன். காலபைரவர் உங்களை கைவிட மாட்டார் என்ற கருத்துடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -