கடன் அடைய பரிகாரம்

cash kunmumam
- Advertisement -

தீபாவளி எப்படி மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் முக்கியமான நாளோ, அதே போல வழிபாட்டிற்கும் முக்கியமான நாள். இந்த நாளில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவர்களை நாம் முறையாக வணங்கும் போது இந்த ஆண்டு முழுவதுமே செல்வ செழிப்புடன் வளமாக வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியான இந்த நாளை நாமும் முறையாக வழிபட்டு செல்வ செழிப்புடன் வாழலாம்.

அந்த வகையில் நாளை தீபாவளி நாளை நரக சதுர்த்திசி நாள் என்றும் கூறுவார்கள். இந்த நாளில் கடன் என்னும் அரக்கன் நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கி செல்ல மகாலட்சுமி தாயாரை வேண்டி எளிமையான முறையில் இந்த பரிகாரத்தை செய்தால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் காணாமல் போகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் அடைய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதே கிடையாது. மிக மிக எளிமையாக அனைவராலும் செய்யக் கூடிய பரிகாரம். அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் என்றும் சொல்லலாம். இப்போது இந்த பரிகாரத்திற்கு என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம் இதற்கு சிகப்பு நிற சந்தனம், சிகப்பு நிற நாட்டு ரோஜா, சிகப்பு நிற குங்குமம், சிகப்பு நிற துணி.

இந்த பரிகாரத்தை தீபாவளி அன்று காலை 6:00 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள்ளாக உங்களுக்கு எந்த நேரம் உகந்ததாக உள்ளதோ அதில் செய்து கொள்ளலாம். இந்த சமயத்தில் மேற் சொன்ன பொருட்களை எல்லாம் முதல் நாலே தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு இரண்டு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இத்துடன் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நல்ல மணம் மிக்க ஊதுபத்தி ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து நெய்வேத்தியமாக ஒரே ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை மட்டும் வைத்தால் போதும்.

இப்போது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சிகப்பு நிற துணியில் சந்தனம், குங்குமம், ரோஜா மூன்றையும் வைத்து முடிச்சாக கட்டி அதையே மகாலட்சுமி தாயாராக மனதிற்குள் பாவித்து பூஜை அறையில் வைத்து விட்டு, இந்த முடிச்சிருக்கும் தீப தூப ஆராதனை காட்டிய பிறகு இதைக் கொண்டு உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சானது உங்கள் பீரோவில் இருக்கும் போது பண வரவு பல மடங்கு அதிகரிக்கும். இதனால் கடன் அடையக்கூடிய வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முடிச்சை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் வேளையில் இதை கால்படாத இடத்திலோ அல்லது ஓடும் நேரிலோ விட்டு விட்டு, இதே போல வேறு ஒரு முடிச்சை தயார் செய்து பூஜை செய்து மறுபடியும் பீரோவில் வைத்து விடுங்கள்.

இந்த முடிச்சை மாற்றுவது தான் மூன்று முறை மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். ஆனால் பரிகாரத்தை தொடங்கும் நாள் நாளை தீபாவளி நரக சதுர்த்தி நாளில் தான் தொடங்க வேண்டும். இதை மற்ற நாளில் இதை தொடங்கக் கூடாது. இந்த வருடம் வாய்ப்பை தவற விட்டவர்கள் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி தாயாரை வணங்கும் முறை

கடனால் துன்பப்படுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ இதுபோன்ற எளிமையான பரிகாரங்களை செய்து கொள்ளலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -