பிரச்சனைகளை தீர்க்கும் நவகிரக பரிகாரம்

navakirgam sivan
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவிதமான பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும். குறிப்பாக கடன் பிரச்சனை அடுத்து வியாபாரம் சரியில்லாமல் இருக்கும் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் தொடர்ந்து உடல் நலக் கோளாறு இப்படியாக இருக்கும். ஆனால் ஒரு சில குடும்பத்தில் இவை எல்லாம் ஒரே நேரத்தில் ஒவ்வொரு ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். இது போன்ற சமயங்களில் அதை சமாளிப்பது பெரும் சிக்கலாகவே இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து தான் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் நம்மை தொடரும் கடன் பிரச்சனை குடும்ப பிரச்சனை தொழில் நஷ்டம் போன்ற அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த நவகிரக பரிகார முறை அமையும். அந்தப் பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர நவகிரக பரிகாரம்

பொதுவாகவே நவகிரக வழிபாடு நவகிரக பூஜை என எதை எடுத்துக் கொண்டாலும் அவை சனிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரகங்களுக்கு ஒவ்வொரு நாட்கள் சிறந்ததாக இருந்தாலும் பொதுவான ஒரு நாள் எனில் அது சனிக்கிழமை தான். அன்றைய நாளில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் உள்ள நவகிரகங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு நாம் வாங்க வேண்டிய பொருட்களும் அதன் எண்ணிக்கையும் மிகவும் முக்கியம். தேங்காய் 9, வெற்றிலை 18, பாக்கு 18, நாட்டு வாழைப் பழம் 18, கதம்பப்பூ 9 முழம் இந்தப் பொருட்களையெல்லாம் மேற் சொன்ன எண்ணிக்கையில் சரியாக வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் வரக் கூடாது.

- Advertisement -

இவையெல்லாம் கொண்டு சென்று நவகிரகத்திற்கு வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு நவகிரகத்தை ஒன்பது முறை வலம் வரவேண்டும் இதே போன்ற வழிபாட்டை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதை செய்ய தொடங்கிய உடனே உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர நவகிரகங்களின் உதவி நிச்சயமாக தேவை. ஒவ்வொரு துன்பமும் நமக்கு நம்முடைய கர்மாவின் பலனாகவே வந்து சேர்கிறது. இத்துடன் சேர்த்து கிரகங்களின் அமைப்பும் சேரும் பொழுது நிச்சயம் அதற்கான விளைவுகள் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். இந்த மாதிரியான பரிகாரங்களை செய்யும் போது அதற்கான தாக்கம் குறைந்து அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எம தீபம் ஏற்றும் முறை

இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -