வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை வீட்டில் தெளித்தால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அது படிப்படியாக குறையும்.

mahalashmi1
- Advertisement -

ஒரு காலத்தில் கோடி கோடியாக சொத்து வைத்திருந்தவன் கூட, கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருக்கும் பணம் சொத்து எல்லாவற்றையும் இழந்து, இன்று நடு வீதியில் நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இழந்து, சொத்து சுகத்தை எல்லாம் இழந்து, வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு என்ன காரணம். நம் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. ஏதோ ஒரு எதிர்மறை சக்தி, எதிர்மறை ஆற்றல், நம்மையும் நம் குடும்பத்தையும் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய கெட்ட நேரமும் கவனக்குறைவும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் விடுபட்டு, நம்முடைய சொத்தை நாம் பாதுகாத்துக் கொள்ளவும், அதே சமயம் கடன் இல்லாமல் வாழவும், பண பிரச்சனை தீரவும், நாம் என்ன செய்ய வேண்டும். ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

கடன் நீங்க வீட்டில் செய்ய வேண்டியவை:
கடன் நீங்க வேண்டும் என்றால், முதலில் இந்த தவறுகள் எல்லாம் உங்களுடைய வீட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். வீடு ஒட்டடை பிடித்து, சிலந்தி கூடு கட்டி இருக்கக் கூடாது. அதையெல்லாம் உடனடியாக சுத்தம் செய்து விட வேண்டும். உடைந்த பொருட்களோ உபயோகப்படுத்தாத பொருட்களோ, மூளை முடுக்குகளில் அதிகமாக சேர்ந்திருக்கக் கூடாது. அழுக்கு படிந்த வீட்டில் நிச்சயமாக கடன் சுமை அதிகரிக்கும். ஆக வீட்டை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினாலே, நம் வீட்டில் பண பிரச்சனை பாதி குறையும். இந்த விஷயத்தை முதலில் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டை சுத்தம் செய்துவிட்டு பிறகு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், கழுத்தை நெறக்கும் கடன் பிரச்சனையில் இருந்து கூட ஒரு சில நாட்களில் வெளிவந்து விடலாம். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டுக் கொள்ளவும். தண்ணீரில் பச்சை கற்பூரம் கரைந்து விடும்.

வீட்டில் காலையோ அல்லது மாலையோ நிச்சயமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்வோம் அல்லவா. அந்த பூஜையில் இந்த டம்ளர் தண்ணீரை வைத்து, முடிந்தால் அதில் இரண்டு துளசி இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை பூஜையை மகாலட்சுமியை நினைத்து மனதார செய்யுங்கள். கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு இந்த தண்ணீரை வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளித்து விட வேண்டும்.

- Advertisement -

மாயிலை வெற்றிலை கிடைத்தால் அதில் இந்த தண்ணீரை தெளிப்பது சிறப்பு. அந்த இலைகள் கிடைக்கவில்லை என்றாலும், உங்கள் கைகளாலேயே எடுத்து மூளை முடுக்குகளில் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். மூளை முடுக்குகளில் குப்பை கூலங்கள் ஒட்டடை தூசிகள் இருந்து இந்த தண்ணீரை தெளித்தால் நிச்சயம் பலன் கொடுக்காது, என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குபேரருக்கு தினமும் இந்த 1 இலையை மட்டும் வைத்து அர்ச்சனை செய்தால், குன்றாத செல்வம் கோடி கோடியாக கொட்டும்.

அதிக கடன் சுமை உள்ளவர்கள் 6 மாதம் தொடர்ந்து வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த தண்ணீரை தெளித்து வர வேண்டும். ஒரு வாரமோ இரண்டு வாரமோ, தெளித்துவிட்டு உடனடியாக லட்ச கணக்கில் இருக்கும் கடன் தீர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. மேல் சொன்ன விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கடன் சுமை குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -