கடன் தீர்ந்து செல்வம் பெருக மிளகு பரிகாரம்

cash pepper
- Advertisement -

இன்று கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழும் ஒரு மனிதனை காண்பது அத்தனை அரிதாகி போய் விட்டது. எல்லோருக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு இருக்கிறது. அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையில் வாழ்கிறார்கள். கடன் வாங்கும் பொழுது ஒருவித பிரச்சனையில் வாங்கினால் கடனை வாங்கிய பிறகு அந்த கடனை பெரும் பிரச்சனையாகி விடுகிறது.

இப்படி தினம் தினம் கடன் பிரச்சனையால் துன்பப்படுபவர்கள் அந்த கடனிலிருந்து வெளிவர பல தாந்திரீக பரிகார முறைகள் இருப்பினும் இந்த பரிகார முறை மிகவும் எளிதானதாகவும் அதே நேரத்தில் சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

இந்தக் கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு பொருள் தான் தேவை அது மிளகுக்கு எதிர்மறை சக்திகளை அழிக்கக்கூடிய தன்மை உண்டு. ஆகையால் தான் அந்தக் காலத்தில் முதல் மிளகுகென்று தனி மகத்துவம் இருந்திருக்கிறது. இதே மிளகு நமக்கு பணவரவையும் அதிகரித்து தரக்கூடிய தன்மை உண்டு.
முன் காலத்தில் பெரிய பெரிய வசதி படைத்தவர்கள் வெளியில் எங்கு சென்றாலும் எங்கு உணவருந்தினாலும் கையில் மிளகு இல்லாமல் சாப்பிடுவதே இல்லை என்று சொல்வார்கள். பகைமையின் காரணமாய் உணவில் ஏதேனும் நஞ்சு கலந்திருந்தால் கூட இந்த மிளகு அதனை முறித்து விடும் என்று வழக்கமுண்டு. அதனால் தான் நம் முன்னோர்கள் நான்கு மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தாலாம் என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள்.

இத்தகைய சக்தி வாய்ந்த இந்த மிளகை வைத்து தான் கடன் தீர்ந்து செல்வம் வரக் கூடிய பரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இரவு உணவுக்குப் பிறகு இதை செய்வது சிறந்த பலனை தரும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு அருந்திய பிறகு 4 மிளகை கையில் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு வெளியில் சென்று விடுங்கள். உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த மிளகை உங்கள் தலையை சுற்றி இடது புறமாக மூன்று முறை சுற்றுங்கள். அதன் பிறகு நான்கு நிலையும் நான்கு திசைக்கு ஒன்றாக வீசி விட்டு வீட்டுக்கு திரும்பி விடுங்கள்.

வீட்டிற்குள் நுழையும் முன் கை கால்களை அலம்பி விட்டு உள்ளே வர வேண்டும். இந்த பரிகாரத்தை ஞாயிறு தோறும் செய்து வந்தால் விரைவில் கடன் அடைவதற்கான வாய்ப்பு பண வரவும் அதிகரிக்கும். இத்துடன் ஐந்து நிலகை ஒரு வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி வெளியில் எங்கு சென்றாலும் கையில் வைத்திருங்கள். இது எதிர்மறை ஆற்றலை நம்மிடம் நெருங்காமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர தை ஏகாதசி

கடன் தீர்ந்து பணம் பெற செய்யக் கூடிய இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் மிக பரிகாரத்தை செய்து பல நடையுங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -