நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் வெகு நாட்களாக திரும்பி வரவில்லையா? அப்போது உடனே இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் பணம் உடனடியாக உங்களை வந்து சேரும்

cash
- Advertisement -

சிலர் பிறரை ஏமாற்றி பிழைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு சிலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பிக் கொடுப்பதில்லை, அல்லது பிறரின் சொத்துக்களை அபகரித்த தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது. இவ்வாறு ஒருவரை ஏமாற்றி பிழைப்பது என்பது பலரின் குணமாகவே மாறிவிட்டது. ஒருவர் முதலில் மற்றவரிடம் உதவி எதிர் பார்க்கும் பொழுது மிகவும் மென்மையானவராகவும், நல்லவராகவும் இருப்பார்கள். ஆனால் கடன் வாங்கிய பிறகு உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்ற அளவிற்கு பேசி விடுவார்கள். அப்படி நீங்கள் கொடுத்த பணமும் திரும்ப வராமல் இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் மட்டிக் கொண்டிருந்தால், உடனே இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சமுதாயத்தில் பலவித குணாதிசயத்துடன் ஏமாற்றம் பேர்வழிகள் இருக்கின்றார்கள். சிலர் தங்கள் இயலாமை காரணமாகவும், உடல் நலம் சரியில்லை, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்குகின்றார்கள். ஆனால் மனசாட்சியுடன் அதனை விரைவாகத் திரும்பி கொடுத்து விடுகிறார்கள். இப்படி ஒரு சிலர் இருக்க, மற்றும் ஒரு சிலரோ தான் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பிறரை ஏமாற்றி பிழைக்கின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சிலரினால் தான் உண்மையான உதவி தேவைப்படுபவர்களுக்கு கூட அவை கிடைக்காமல் போய்விடுகிறது. அதேபோல் நல்லவர்கள் என்று நம்பி பலரும் உதவி செய்துவிட்டு, அதனை திரும்ப வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ள இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஒரு வீட்டின் தெற்குப் பகுதியில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்த திசையாகும். செவ்வாய் காரகன் என்று அழைக்கப் படும் முருகப்பெருமான் தீமைகளை அழைக்கக்கூடிய நவகிரக நாயகன் ஆவார். உங்கள் வீட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் காலியான இடத்தை சுத்தம் செய்து, அங்கு ஒரு 7 அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இதனை தினமும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி தீபம் ஏற்றிவிட்டு, தீப தூப ஆராதனை அறிவிப்பு மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நாம் கடனாக கொடுத்த பணம் வெகுநாட்களாக திரும்பி வராமல் இருந்தால், அவை உடனடியாக திரும்பி வரும். அல்லது நீங்கள் ஏமாந்த சொத்துக்கள் உங்களை வந்தடைவதற்கான வழிகள் உருவாகும்.

அப்படியில்லாமல் வீட்டில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டு, உங்களுக்கு நியாயம் கிடைக்காமல் இருந்தாலும், உங்கள் பணம் மற்றும் நகைகள் திருடு போய் இருந்தாலும் இவை அனைத்திற்கும் சரியான வழி பிறக்கும். உங்களை வந்து சேர வேண்டிய உங்களுக்கு உரிமையான அனைத்தும் விரைவாக உங்களை தேடி வரும்.

- Advertisement -