பணப்பிரச்சனை தீர புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்

perumal2
- Advertisement -

பெருமாள் வழிபாடு நமக்கு அளவில்லாத செல்வத்தைப் பெற்றுத் தரும் என்பது தெரியும். பணத்திற்கு சொந்தகாரியான மகாலட்சுமியை தன் மார்பில் வைத்திருக்கும் பெருமாளுக்கு உரிய மாதம், இந்த புரட்டாசி மாதம். தீராத பண பிரச்சினை தீர, அடைக்க முடியாத கடனை அடைக்க, அடகு வைத்திருக்கும் சொத்து நகைகளை மீட்க, இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரித்தால் பெருமாளின் அருள் ஆசையை முழுமையாகப் பெற்று, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு பெறலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுபவர்கள் சீக்கிரமாக வறுமையில் இருந்து வெளிவந்து செல்வ செழிப்புடன் வாழலாம்.

புரட்டாசி மாதத்தில் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்:
இப்போது புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, முடிந்தவர்கள் உடல் ஆரோக்கியம் பெற்றவர்களாக இருந்தால் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்கள் வீட்டிலேயே ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். (காலை 5.45 க்கு முன்பு இந்த மந்திரத்தை உச்சரித்தால் கை மேல் பலன் உண்டு.)

- Advertisement -

உடல்நிலை சரியில்லை அதிகாலை வேளையில் குளிக்க முடியாது என்பவர்கள், பல் தேய்த்து முகம் கை கால் கழுவி விட்டு தலையில் மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொண்டும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மந்திரத்தை உச்சரிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. உடல் தூய்மையும் மனத்தூய்மையும் இருந்தால் மட்டுமே போதும். விளக்கு ஏற்ற வேண்டும், பிரசாதம் வைக்க வேண்டும், கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இந்த மந்திர உச்சாடனத்தில் கிடையாது.

அமைதியாக தரையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து அந்த பெருமாளை மனதார நினைத்து உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சொல்லி வேண்டுதல் வைக்கவும். பிறகு கண்களை மூடி ‘ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம், ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ!’ என்ற இந்த மந்திரத்தை ஒற்றைப்படையில் சொல்ல வேண்டும். 11, 21, 101, உங்களுடைய கணக்கு தான். உங்களுக்கு மந்திரத்தை உச்சரிக்க எவ்வளவு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தை கணக்கு வைத்துக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த புரட்சி மாதம் முழுவதும் தினமும் இந்த மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரித்தால் சீக்கிரம் உங்களுடைய பணம் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

- Advertisement -

தினமும் உங்களுக்கு மந்திரத்தை சொல்வதற்கு நேரமில்லை எனும் பட்சத்தில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் மட்டுமாவது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். மந்திரத்திற்கு எப்போதுமே ஒரு பவர் உண்டு. ஆனால் அந்த மந்திரத்தை குறிப்பிட்ட ஒரு சில தினங்களில் சொல்லும்போது நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு அமாவாசை பௌர்ணமி இந்த தினத்தில் மந்திர உச்சாடனம் செய்யும்போது மந்திரத்திற்கு உண்டான பலனை இரட்டிப்பாக நம்மால் பெற முடியும் என்று சொல்லுவார்கள்.

அதே போல தான் இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால் பெருமாளுக்கு உரிய மந்திரத்தை, பெருமாளை நினைத்து உச்சரிக்கும் போது வரங்களை நம்மால் எளிமையாக பெற முடியும். இந்த புரட்டாசி மாதத்தை யாரும் தவறவிடாதிங்க. உங்கள் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகி, வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்று நினைப்பவர்கள் மேல் சொன்ன விஷயங்களை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை இதை வைத்து வணங்கினால் சகல செல்வ நலன்களையும் பெறுவதோடு அல்லாமல் சனிபகவானின் அருளையும் சேர்த்தே பெறலாம்.

பின்குறிப்பு: காலையில் மந்திரத்தை உச்சரிக்க நேரமே இல்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவு, என்பவர்கள் மாலை 6:00 மணி போல இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் தவறு கிடையாது.

- Advertisement -