புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை இதை வைத்து வணங்கினால் சகல செல்வ நலன்களையும் பெறுவதோடு அல்லாமல் சனிபகவானின் அருளையும் சேர்த்தே பெறலாம்.

perumal sani
- Advertisement -

புரட்டாசி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது பெருமாள் தான். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அப்படி வணங்குபவர்கள் இந்த முறையில் வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். இந்த இரண்டையும் ஒரு சேர பெற நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெருமாளின் அருளாசியை பெற புரட்டாசி சனிக்கிழமையில் வழிபடும் முறை
இந்த சனிக்கிழமையில் வரும் எந்த ஒரு நாளும் விசேஷம் தான். அது பிரதோஷம் ஆகட்டும் மற்ற எந்த ஒரு வழிபாட்டிற்குரிய தினங்களாக இருந்தாலும் அது சனிக்கிழமையில் வரும் பொழுது பலவகையில் நமக்கு நன்மை தரக் கூடியதாக அமைகிறது. சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷம் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல புரட்டாசி சனிக்கிழமையில் நாம் பெருமாளை வணங்குவதும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை போடுபவர்கள் அவரவருக்கு முறைகளில் வழிபாடு செய்து கொள்ளலாம். அத்துடன் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு வழிபாடும் உள்ளது. அதற்கு நாம் ஒரு கலச சொம்பை தயார் செய்து கொள்ள வேண்டும். இது சில்வர், இரும்பு தவிர்த்து மற்ற பொருட்களால் ஆன சொம்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் சுத்தமான தண்ணீரை பாதியளவு நிரப்பிய பிறகு ஒரு கைப்பிடி நிறைய துளசியை அதில் போடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், விபூதி மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது இந்த சொம்பை பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இப்படி கலசம் வைத்த பிறகு அந்த கலசத்திற்கு முன்பாக ஒரு அகல் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு நல்லெண்ணெய் நெய் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். புரட்டாசியில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த கலச வழிபாட்டை செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் ஆசி கிடைக்கும்.

- Advertisement -

இப்படி வழிபடுவதோடு இந்த சனிக்கிழமையில் நாம் செய்யும் சில தானங்கள் நம்மை சனியின் பார்வையிலிருந்து காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நாம் கலசம் வைத்து வழிபட்ட பிறகு பச்சரிசியில் தயிர் கலந்து தயிர் சாதமாக செய்து அதை தாளிக்காமல் பெருமாளுக்கு படைத்த பிறகு அதை தானமாக கொடுக்க வேண்டும். இத்துடன் வஸ்திர தானமும் செய்ய வேண்டும் இதை வயதில் முதியவர்களுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே:நாளை துர்காஷ்டமி அன்று துர்க்கையை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் போதும் எதிரிகள் உங்கள் பெயரை கேட்டாலே அலறி அடித்து ஓடி விடுவார்கள்.

இந்த கலச வழிபாட்டோடு இந்த தான முறையையும் பின்பற்றும் போது பெருமாளின் அருளாசியோடு, சனியின் தாக்கத்திலிருந்தும் தப்பித்து கொள்ளலாம் என்பது தான் இந்த வழிபாட்டின் முக்கிய அம்சம். இந்த முறையில் வழிபட்டு நம்பிக்கை உள்ளவர்கள் இந்த புரட்டாசி சனிக்கிழமை முதல் இப்படி பெருமாளை வழிபட்டு பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -