உங்களை பாடாய் படுத்தி எடுக்கும் கடன் கூட பஞ்சு பஞ்சா பறந்து போகும். பெருமாளின் பாதங்களில் இந்த பொருளை வைத்து வேண்டிக் கொண்டால்.

perumal
- Advertisement -

பிறவிக்கடன் ஆக இருக்கட்டும், நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் ஆக இருக்கட்டும், எல்லாவகையான கடன் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொடுக்கக் கூடிய சக்தி அந்த பெருமாளுக்கு உண்டு. பெருமாளின் பாதங்களை பக்தியோடு உண்மையான அன்போடு பற்றி கொள்பவர்களுக்கு பிரச்சனைகள் ஒரு பாரமாக நிச்சயம் இருக்காது. சரி தீராத பணகஷ்டம் உள்ளது. தீராத கடன் சுமை உள்ளது. வட்டி கூட கட்ட முடியாமல் கஷ்டத்தில் வறுமையில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை கூடிய சீக்கிரமே காண்பீர்கள்.

புதன்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சதுர வடிவில் இருக்கும் மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே 2 கொட்டைப்பாக்கு, 3 கிராம்பு, 3 ஏலக்காய், 3 ஒரு ரூபாய் நாணயம், 1 விரலி மஞ்சள், இந்த பொருட்களை வைத்து விட்டு இதை ஒரு மஞ்சள் நூலில் சிறிய முடிச்சாக கட்டி அப்படியே பெருமாளின் பாதத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பெருமாளின் படம் இருக்கும் அல்லவா. அந்த பெருமாளின் பாதங்களிலேயே இந்த முடிச்சை வைத்துவிட்டு என்னுடைய கடன் சீக்கிரம் தீர வேண்டும். அதற்கான வழியை சீக்கிரம் நீ எனக்கு காட்ட வேண்டும் என்று மனதார பெருமாளே பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த முடிச்சை தயார் செய்ய வேண்டும். முடிந்தால் கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து இந்த பூஜையை செய்து இந்த முடிச்சை இரண்டு பேருடைய கைகளால் தொட்டு பெருமாள் பாதங்களில் வையுங்கள்.

அதன்பின்பு உங்களால் முடிந்த நிவேதனத்தை பெருமாளுக்கு வைத்து, தீபமேற்றி கற்பூரம் ஏற்றி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொண்டு கணவன் மனைவி இரண்டு பேரும் பெருமாளிடம் நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, உங்களுடைய பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். உங்களுடைய கடன் தீர்ந்த பின்பு இந்த முடிச்சைக் கொண்டு வந்து திருப்பதி உண்டியலில் சேர்ப்பதாக பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

- Advertisement -

முடியாதவர்கள் உங்களுடைய கடன் தீர்ந்த பின்பு, இந்த முடிச்சை கொண்டுபோய் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது பெருமாள் கோவில் உண்டியலில் சேர்த்து விடுவதாகக் கூட பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அதன் மூலம் எந்த தவறும் கிடையாது. கடன் தீரும் வரைஅந்த முடிச்சை பெருமாளின் பாதங்களிலேயே வைத்துவிடுங்கள்.

பூஜை அறையை சுத்தம் செய்யும் போது மட்டும் இந்த முடிச்சை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு சுத்தம் செய்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இவ்வாறாக இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்களுடைய கடன் தொகைக்கு ஏற்றவாறு கூடிய சீக்கிரத்திலேயே கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

வெறும் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு கூரையை பிச்சுக் கொண்டு பணம் வரும் என்று மேலே பார்த்துக்கொண்டு உட்காரக் கூடாது. உங்களுடைய பண பிரச்சனையை தீர்க்க எந்த வேலைகளை நீங்கள் செய்ய வேண்டுமோ அதைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். உங்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்த பரிகாரம் ஒரு தூண்டுதலாக இருக்கும். நம்பிக்கையோடு பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் பெற அந்தப் பெருமாளை வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -