சனி ஹோரையில் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலை உண்டாகுமா? தீரா கடன் தீர சனி ஹோரையில் செய்ய வேண்டியது என்ன?

- Advertisement -

ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட சில நேரம், குறிப்பிட்ட கிரக ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் அந்தந்த பலன்கள் கிடைக்க படுகின்றன. அந்த வகையில் ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒவ்வொரு விதமான ஹோரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பகலில் ஒரு ஹோரையும், இரவில் ஒரு ஹோரையும் இருக்கின்றன. அதிலும் சுப மற்றும் அசுப ஓரைகள் உண்டு. இந்த ஓரைகளின் அடிப்படையில் தீராத கடன்கள் தீர எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் விரிவாக அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Oorai in Tamil
Oorai in Tamil

பொதுவாக சனி ஓரையை அசுப ஓரை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் சில குறிப்பிட்ட காரியங்களை செய்வதற்கு அதுவே சுப ஹோரையாக இருந்து வருகிறது. இத்தகைய சூட்சமங்கள் தெரிந்து, அந்தந்த விஷயங்களை செய்து வந்தால் நமக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றி மேல் வெற்றி குவிவதற்கு சனி ஹோரையும் சுப ஓரையாக இருக்கும் சூட்சமம் என்ன?

- Advertisement -

ஒவ்வொரு நாளில் வரக்கூடிய சனி ஹோரையில் பழைய பாக்கிகள் கொடுப்பது, கடன் தொகையிலிருந்து சிறு தொகையை கொடுத்து கடனை அடைப்பது அல்லது முழு தொகையையும் கொடுத்து அந்த நேரத்தில் கடனை நிவர்த்தி செய்தால் மீண்டும் மீண்டும் கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்கப்படும்.

எப்பொழுதும் ஒருமுறை வாங்கிய கடன் மீண்டும் மீண்டும் நம்மை தொடர்வதற்கு காரணம் அதை கொடுக்கக்கூடிய நேரம் என்பது சரியாக அமையப் பெறாததே ஆகும் என்கிறது ஜோதிட ரகசியங்கள். கடனை வாங்குவதற்கு ஒரு நேரம் உண்டு அதே போல கடனை கொடுப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. குளிகை நேரம் என்பது திரும்பத் திரும்ப நடைபெறும் ஒரு செயலாகும். அந்த நேரத்தில் சென்று கடனை வாங்கினால், மீண்டும் மீண்டும் கடன் வாங்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

- Advertisement -

ஹோரைகள் நம் வீட்டில் இருக்கக்கூடிய காலண்டரின் பின்னால் அட்டவணையாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கிழமையும், நேரமும் கணிக்கப்பட்டு இருக்கும். எந்த நேரத்தில் சனி ஓரை வருகிறது? என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் சென்று உங்களுடைய கடன்களை நீங்கள் அடைத்து விட்டு வந்தால், மீண்டும் நிச்சயம் கடனை வாங்க கூடிய சூழ்நிலையை இறைவன் உங்களுக்கு கொடுக்க மாட்டார்.

கடன் மட்டும் அல்லாமல் ஊழ்வினைகள், செய்த பாவங்களுக்கான பரிகாரங்களை சனி ஹோரையில் செய்தால் முற்றிலும் நிவர்த்தி அடையும் என்பது நியதி. பாத யாத்திரை செல்வது, நடைப்பயணம் துவங்குவது போன்ற காரியங்களுக்கும், மரம் நடுகின்றவர்கள் மற்றும் அணை கட்டுப்பவர்கள் சனி ஹோரையில் இதனை துவங்குவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 15/05/2023 முதல் 21/05/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

வீட்டில் ஒரு செடியை நட வேண்டும் என்றாலும், ஒரு மரத்தை நட்டு வளர்க்க வேண்டும் என்றாலும் சனி ஓரையில் நீங்கள் செய்து பாருங்கள், அது நன்கு செழித்து வளரும். எல்லா நேரங்களிலும் மரம் வைத்தால் அது முளைத்து வந்து விடுவது இல்லை! சனி ஓரையில் மரத்தை நட்டால் செழிப்பாக நமக்கு அதன் பலன்கள் கிடைக்க செய்யும் என்பது நம்பிக்கை. இது போல எந்தெந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தால் வெற்றி நிச்சயம் நம் பக்கம்.

- Advertisement -