கடன் கரைந்து காணாமல் போக இதுவரை சொல்லாத எளிமையான தானிய பரிகாரம்.

cash thaniyam
- Advertisement -

கடன் வாங்கும் போது ஒவ்வொருவரும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழும் நிலையில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கடனை என்ன ஆசைப்பட்டா வாங்குகிறோம் சூழ்நிலை காரணமாக தானே வாங்குகிறோம் என்று பலர் நினைக்கக் கூடும். எப்படி இருப்பினும் கடன் சுமை தானே.

கடன் சுமை நம் மீது விழுவது நம்முடைய கர்மாவின் பலனாகத் தான் என்றும் நம்முடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறும் போது இது போல கடனில் சிக்கிக் கொள்வோம் என்று சொல்லப்படுகிறது. எப்படி ஆயினும் கடன் வாங்கி விட்டாலே அது வேதனைக்குரிய விஷயம் தான். அந்த கடனிலிருந்து எப்படி மீள்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நான் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடன் தீர செய்ய வேண்டிய தானம்

இந்த பரிகார முறையை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். கடன் அடைக்கவும், கடன் தொடர்பான பரிகாரத்தை செய்யவும் செவ்வாய்க்கிழமை சிறந்த நாள். அன்று மாலை வீட்டில் விளக்கு வைத்த பிறகு ஒரு பெரிய தாம்பாள் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டு முழுவதும் மைசூர் பருப்பை பரப்பி வையுங்கள்.

அதன் பிறகு இந்த பருப்பின் நடுவில் ஒரே ஒரு ரோஜா மலரை வைத்த பிறகு பூஜை அறையில் இந்த தட்டை வைக்க வேண்டும். இந்த சமயத்தில் பூஜை அறையில் நீங்கள் பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி இருக்கும் கடன் முழுவதும் அடைந்து கடனில் இருந்து மீண்டு விட்டதாக மனதிற்குள் கற்பனை செய்து அது அப்படியே நடக்க வேண்டும் என்றும் வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தட்டு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். புதன்கிழமை காலையில் இதில் உள்ள பொருட்களை ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். இதை வேறு எங்கும் போடக் கூடாது. இந்த தானிய பரிகாரத்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செய்தாலும் சிறப்பு அல்லது மாதத்திற்கு ஒரு செவ்வாய் கிழமையாவது செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்து வரும் இன்றைய அற்புதமான நாளில் இந்த பொருட்களை வாங்கினால் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு ஏற்படும்.

இந்த பரிகாரத்தை செய்ய செய்ய உங்களுக்கான கடன் சுமை முழுவதுமாக குறைந்து பண வரவும் அதிகரித்து கடன் தொல்லை இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -