கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை தீர உப்பை இப்படி செய்தால் போதும். தீராத கடனும் விரைவில் தீர்ந்துவிடும்

kadan
- Advertisement -

ஒரு உப்பை வைத்து இவ்வளவு பெரிய பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று பலருக்கும் மனதில் சந்தேகம் இருக்கும். நாம் உண்ணும் உணவில் சேர்த்து சாப்பிடும் உப்பிர்க்கு அபரிமிதமான சக்திகள் பல உள்ளன. வீட்டில் உள்ள பெரியவர்கள் மந்திரிக்கும் பொழுதும், திருஷ்டி சுத்தி போடும்போதும் உப்பைப் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல் தங்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று கோவிலுக்குச் சென்று கல் உப்பினை வாங்கி சுற்றிப் போட்டு கொடி மரத்தின் மீது போட்டு வருவதையும் பார்க்கிறோம். கடல் நீரில் தலை முழுகினால் நமது பாவங்கள் தீரும் என்பதும் காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதீகமாகும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த உப்பினை பயன்படுத்தி நமக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் தீர எவ்வாறு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan1

கடன் வாங்குவது என்பது எவரும் விருப்பமாக செய்யும் செயல் அல்ல. தன்னால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் வரும்பொழுது தான் பலரும் கடன் வாங்க முயல்கின்றனர். ஆனால் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் அவதிப்படும் பொழுது பெரும் கஷ்டத்திற்கு ஆளாகின்றார்கள். இவ்வாறு திருப்பி செலுத்த முடியாத கடன்களையும், மிகவும் பிரச்சனையாக இருக்கும் கடன் தொல்லைகளையும் தீர்க்கக்கூடிய உப்பு பரிகாரத்தை வாரம் ஒருமுறை வீட்டில் செய்து வந்தால் சீக்கிரத்தில் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -

அதற்காக முதலில் ஒரு பித்தளை அல்லது மண் பானையிலான சொம்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முழுவதுமாக நீரை நிரப்பிக் கொண்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் குங்குமம் சேர்த்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் பூஜை சம்பந்தமான விஷயங்களுக்கு மஞ்சள், குங்குமம் பயன்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவை இரண்டும் மங்களகரமான பொருட்கள் என்பதனால் நமது வேண்டுதல் அனைத்திற்கும் இவை நல்ல பலன்களை அளிக்கின்றன.

sembu-sombu-salt

பிறகு இரண்டு கைகளிலும் கல்லுப்பை எடுத்துக் கொண்டு, கைகளை மூடி முதலில் விநாயகரை வணங்கி, அதன் பிறகு உங்களுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சினையை மனதில் நினைத்து, யாரிடம் நீங்கள் கடனை வாங்கி உள்ளீர்களோ அவர்களின் பெயரை சொல்லி அவரிடம் வாங்கிய கடனை நான் சீக்கிரத்தில் திருப்பிக் கொடுக்க நல்ல வழி கிடைக்க வேண்டும் என்று மகாலட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பல கடன் பிரச்சனை இருந்தாலும் அவற்றை எல்லாம் சேர்த்து சொல்லாமல் ஏதேனும் ஒன்றை மட்டும் முதலில் சொல்லி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கற்பூரத்தை ஏற்றி சொம்பில்ம் இருக்கும் தண்ணீர் மீது வைத்துவிட வேண்டும்.கற்பூரம் எரிந்து அணையும் வரை உங்கள் கண்களை மூடி தியானம் செய்யும் நிலையில் அமர்ந்து உங்களுக்கான பிரச்சினையை சொல்லி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

கற்பூரம் அனைந்த பிறகு இந்த நீரை தென்னை மரத்தில் ஊற்றிவிட வேண்டும். தென்னை மரத்தை தவிர வேறு எந்த செடிகளிலும் இந்த நீரை ஊற்றக் கூடாது. அப்படி தென்னை மரம் இல்லை என்றாலும் ஓடும் நீரில் ஊற்றி விடலாம். இந்த பரிகாரத்தை வாரம் ஒருமுறை புதன், வெள்ளி, செவ்வாய் இது போன்ற ஏதாவது ஒரு தினங்களில் செய்து வரலாம். இதனை செய்து வரும் பொழுது உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை சீக்கிரத்தில் அடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -