கடன் தீர வாராகி அன்னைக்கு தேய்பிறை பஞ்சமியில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

varahi cash dheepam
- Advertisement -

இன்றைய காலக்கட்டம் மட்டுமல்லாது எப்போதுமே கடன் என்பது பெரும் பிரச்சனைக்குரிய விஷயம் தான். அதை வாங்கும் போது நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. கடனை வாங்கிய பிறகு அதை அடைக்க முடியாமல் தினம் தினம் அவதிக்குள்ளாகிறோம். இத்தகைய பெரும் கடன் பிரச்சினையில் இருந்து மீண்டு வெளியே வர வாராகி அன்னைக்கு ஏற்றப்படும் இந்த தீபம் துணை புரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னை துன்பம் என்று ஒருவர் நினைத்த மாத்திரத்திலே வந்து நிற்கும் கருணை உள்ளம் கொண்ட தெய்வம். அத்தகைய அன்னைக்கு பஞ்சமி திதி ஆனது மிகவும் விசேஷம். ஏனெனில் இவர்கள் சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக இருக்கிறார். ஆகையால் இந்த திதியில் நாம் இவரை நினைத்து கேட்கும் எந்த வேண்டுதலும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அதுவும் தேய்பிறையில் இந்த அன்னையை வணங்கும் போது நம்முடைய துன்பங்கள் யாவும் தேய்ந்து போகும் என்பது வழக்கு. அப்படியான இன்றைய நாளில் ஏற்றப்படும் இந்த தீபமானது நம்முடைய பெரும் துயரான கடனை நீக்கி நல்ல முறையில் செல்வ செழிப்புடன் வாழ வழி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தீப வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர வாராஹி அன்னைக்கு பஞ்சமி தீபம்

இந்த தீபத்தை இன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்ளாக ஏற்ற வேண்டும். பொதுவாக வாராகி அன்னை வழிபாடு இரவு தொடங்கும் வேலையில் செய்தால் தான் விசேஷமான பலன்களை பெற முடியும். அந்த வகையில் இந்த தீபத்தை இன்று மாலை ஏற்றங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக வீட்டில் வாராகி அன்னை படம் இருந்தால் அவருக்கு பிடித்த செவ்வரளி மலர்களால் மாலை தொடுத்து போடுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் விரலி மஞ்சள் மாலையும் அன்னைக்கு சாற்றலாம். இத்துடன் அன்னைக்கு நெய்வேத்தியமாக ஏதேனும் கிழங்கு வகைகளை சமைக்காமல் படைக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் மாதுளை முத்துக்களை வைத்தும் வணங்கலாம்.

இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எறியும் படி பூஜை அறையில் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தையே நீங்கள் வாராகி அன்னையாக பாவித்து கொள்ளுங்கள். ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்த பிறகு தீபத்தின் முன் அமர்ந்து அன்னை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அப்போது ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் என்ற இந்த மந்திரத்தை 24 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களுக்குள்ள கடன் பிரச்சனை மட்டுமின்றி வேறு எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அவை நிச்சயம் தீர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே: 21 நாட்களில் திருமண தடை விலக பரிகாரம்

இந்த தீபமானது தொடர்ந்து அரை மணி நேரம் எரிய வேண்டும். அதன் பிறகு குளிர வைத்து விடுங்கள். இவ்வளவு தான் வழிபாடு. இந்த எளிமையான வழிபாட்டை செய்து வாராகி அன்னையின் அருளை பெற்று கடன் பிரச்சனைகள் நீங்கி நல்ல முறையில் வாழ வழி தேடி கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

- Advertisement -