21 நாட்களில் திருமண தடை விலக பரிகாரம்

durgai
- Advertisement -

பருவத்தே பயிர் செய் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். எந்தெந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த வயதில் நடந்து விட வேண்டும். பணம் காசை எல்லாம் பிறகு சப்பாத்தித்துக் கொள்ளலாம். ஆனால் வயது போனால் திரும்புமா. வாழ வேண்டிய வாழ்க்கையை திரும்பவும் நம்மால் வாழ முடியுமா. ஆகவே, அந்தந்த வயதில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட அந்த வயதுக்குள் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோருமே அதற்கான முயற்சிகளை எடுப்போம். ஆனால், சில பேருக்கு திருமண தடை இருக்கும். என்ன பரிகாரம் செய்தாலும் நல்ல வரன் அமையாது. உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால், மிக மிக எளிமையான முறையில் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். 21 நாட்களில் உங்கள் திருமண தடை உடையும். நிச்சயம் கெட்டிமேல சத்தம் உங்கள் வீட்டில் கேட்கும். திருமணத்தடையை விளக்கும் அந்த பரிகாரம் என்ன. நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

திருமண தடை விலக பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு பச்சைக் கற்பூரம், வெள்ளை குங்கிலியம், கருப்பு உளுந்து இந்த 3 பொருட்கள் தேவை. இந்த பரிகாரத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பூஜை செய்து தொடங்குவது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஒரு மஞ்சள் நிற துணியில் மேலே சொன்ன மூன்று பொருட்களையும் வைக்கவும்.

வெள்ளை கொங்கிலியம் 1 கைப்பிடி, கருப்பு உளுந்து 1 கைப்பிடி, பச்சை கற்பூரம் 2 துண்டு, வைத்தால் மட்டும் போதும். இந்த முடிச்சை பூஜை அறையில் குலதெய்வத்தின் படத்திற்கு முன்பு அல்லது மற்ற தெய்வங்களின் படத்திற்கு முன்பு வைத்துவிட்டு, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீங்க அதேபோல செஞ்சிடுங்க.

- Advertisement -

இந்த முடிச்சை இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் வாசிக்கணும். எனக்கு வாழ்க்கையில் இருக்கும் திருமண தடை விலகி சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்யணும். 21 நாட்கள் தொடர்ந்து இந்த முடிச்சை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் நினைத்து துர்க்கை அம்பாளை நினைத்து திருமணம் நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்கணும்.

பிறகு அந்த முடிச்சை சுவாமி அறையிலேயே வைத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவுதான். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு 21 நாட்கள் கழித்து இந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் ஓடுற தண்ணீரில் விடனும். இல்லை என்றால் கடலில் போட்டு விடலாம்.

- Advertisement -

தண்ணீரில் விடுவது தான் சரியான முறை. வேறு வழியே இல்லை எங்களுக்கு கடல், ஆறு, ஏரி, குளம் எதுவுமே இல்லை. தண்ணீரில் போடவே முடியாது எனும் பட்சத்தில் இந்த மூன்று பொருட்களை ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டு கலந்து அப்படியே கால் படாத இடத்தில் கொண்டு போய் கொட்டி விட்டு வர வேண்டும். வீட்டுக்கு பக்கத்திலேயே சாக்கடையில் எல்லாம் கொட்ட கூடாது.

மண்பாங்கான இடத்தில் மனிதர்கள் கால் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ஊருக்கு ஒதுக்கப்புறமாக கொண்டு போய் கொட்டி விட்டு வர வேண்டும். இந்த எளிமையான பரிகாரத்தை செய்யும் போதே உங்களுடைய திருமண தடைகள் எல்லாம் சரியாகி சீக்கிரமே நல்லவரன் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: கோடி ரூபாயை கொட்டி தரும் கோதுமை பரிகாரம்

மனதிற்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையும். ஆண்கள் பெண்கள் இரண்டு பேருமே இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -