வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி கொடுத்து விடலாம்.

vasambu
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சராசரியாக நடுத்தர வர்க்கத்தில் வாழும் மனிதர்கள் முதல், கோடி கோடியாக சம்பாதித்து தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் வரை, பணக்காரர்கள் வரை, கடன் வாங்கி ரொட்டேஷனில் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய தொழிலாக இருந்தாலும், செய்யும் தொழில் முதலீட்டிற்காக கடன் வாங்கி தான் ஆக வேண்டும். ஆகவே, கடன் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். நமக்கு மட்டும் தான் கடன் இருக்கிறது. நாம் மட்டும்தான் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கிடையாது. ஒரு நாடே பணம் பற்றாமல் அடுத்த நாட்டிடம் கடன் வாங்குகிறது. இந்தியாவும் தன்னுடைய தேவைக்கு அடுத்த நாட்டிடம் கடன் வாங்கி தானே இருக்கிறது. எனவே, அளவோடு கடன் வாங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்கு செல்வோம்.

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வசம்பு பரிகாரம்:
சரி இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவதற்கு இன்று தாந்திரீக ரீதியாக ஒரு பரிகாரத்தை பார்க்க போகின்றோம். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் வசம்பு. பெரும்பாலும் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ரோட்டோர வீதிகளில் சில பேர் கடை போட்டு இருப்பார்கள் அல்லவா. அந்த கடையிலும் கிடைக்கும். பேரம் பேசாமல் ஒரு வசம்பு வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டிற்கு வந்து மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி கொள்ளவும். அந்த நெருப்பில் இந்த வசம்பை சுட்டுக் கொள்ளுங்கள். வசம்பு கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். இப்போது இந்த வசம்பு கருப்பு நிறம் இருக்கிறது அல்லவா. அந்த கறி நிறத்தில், காகிதத்தில் உங்கள் கடன் பிரச்சனையை எழுத வேண்டும். (வசம்பை பேனா போல கையில் பிடித்து, பேப்பரில் எழுதினால் அந்த கறி பேப்பரில் ஒட்டி எழுத தொடங்கும்).

உதாரணத்திற்கு ‘ரமேஷிடம் வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை சீக்கிரம் திருப்பி தர வேண்டும்’. என்று அந்த வெள்ளை காகிதத்தில் எழுதி குலதெய்வத்தை நினைத்து அப்படியே அந்த பேப்பரை நான்காக மடித்து ஒரு கண்ணாடியில் பாட்டிலில் போட்டு, அதில் பச்சை கற்பூரம் ஒரு சின்ன துண்டு போட்டு மூடி போட்டு அப்படியே வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் யார் கைக்கும் எட்டாமல் வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் கடனை திருப்பித் தருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். பணம் எந்த ரூபத்தில் ஆவது உங்கள் கைக்கு வரத் தொடங்கும்.

- Advertisement -

கூடிய சீக்கிரத்தில் உங்கள் கடனை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது மொத்தமாகவோ திருப்பி கொடுத்துவிடுவீர்கள். சில பேருக்கு இந்த பரிகாரம் சீக்கிரத்தில் பலன் தரும். சில பேருக்கு பரிகாரம் செய்தாலும் பலன் பெறுவதில் ஒரு சில கஷ்டங்கள் இருக்கும். இருந்தாலும் முயற்சியை கைவிடாதீர்கள். பரிகாரத்தை ஒருமுறை செய்து வைத்து விட்டு மீண்டும் மீண்டும் கடனை திருப்பிக் கொடுக்க விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தால், நிச்சயம் உங்கள் கடனை சீக்கிரம் திருப்பி தருவதற்கு உண்டான ஒரு வழியை இந்த பிரபஞ்சம் காட்டித்தரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லை அறவே இல்லாமல் வீடு, மனை, வாசல் என சகல சௌபாக்கியத்தோடு ராஜ வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையெனும் இதை செய்தால் போதும்.

கடனை திருப்பிக் கொடுத்த பிறகு பாட்டிலில் இருக்கும் பேப்பரை நெருப்பில் பொசுக்கி அந்த கறியை தண்ணீரில் கரைத்து விடுங்கள். இது தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும் இது ஆன்மீகத்தில் சார்ந்தது தான். குலதெய்வத்தை நினைத்து இதை செய்பவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெரலாம்.

- Advertisement -