கடன் தொல்லை அறவே இல்லாமல் வீடு, மனை, வாசல் என சகல சௌபாக்கியத்தோடு ராஜ வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையெனும் இதை செய்தால் போதும்.

murugan gurubhagavan
- Advertisement -

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நல்ல செல்வாக்குடன் பேர் புகழ் வீடு மனை மக்கள் என வாழ ஆசைப்படுவது இயற்கையே. ஆனால் அப்படி ஒரு சௌகரியமான வாழ்க்கை எந்த ஒரு மனிதருக்கும் தானாக அமையுமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். இது போன்றதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் முதலில் கடுமையாக உழைக்க வேண்டும் மேலும் அவர்கள் யோகக்காரர்களாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்திலும் விட கடவுளின் அனுகிரகம் கட்டாயமாக தேவை. அந்த அனுகிரகத்தை பெறுவதை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக நம் வாழ்க்கையை முக்கியமான செல்வமாக பாவிக்கப்படும் குழந்தை செல்வமாக இருக்கட்டும் அல்லது பலரின் கனவாக இருக்கக் கூடிய வீடு மனை ஆக இருக்கட்டும் இரண்டிற்கும் முக்கியமான தெய்வமாக விளங்குபவர் கந்த கடவுள் தான். இவர் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக விளங்க கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவரை எப்படி வணங்கி ஏதை செய்தால் நாம் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ராஜ போக வாழ்க்கை வாழ வழிபாடு
முருகரை வழிபட பல ஆலயங்கள் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் வழிபாட்டு முறை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இங்கு சென்று முருகரை வழிபடும் போது சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆலயத்திற்கு நம் வேண்டுதல் நிமித்தமாக செல்லும் போது நம்முடைய நட்சத்திர நாளில் சென்றால் அமோகமான பலனை பெறலாம்.

அது மட்டுமின்றி அங்கு இருக்கும் நாழிக்கிணற்று, கடலில் கட்டாயம் குளிக்க வேண்டும். இத்துடன் அங்கே சண்முகர் வழிபாடு செய்ய வேண்டும். மேலும் முருகருடன் இருக்கும் பெருமாளையும் தரிசிக்க வேண்டும். அது மட்டும் இன்றி வள்ளி குகை தரிசனம் செய்வதும் அவசியம். திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபட்ட பின்பு இரண்டு மணி நேரம் வரை அந்த ஆலயத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது தான் ஆலயத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றில் நம்மில் குடி கொள்ளும்.

- Advertisement -

இந்த திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்திற்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடையில் தான் செல்ல வேண்டும். அதே போல் அங்கு சென்று மூன்று நபர்களுக்கு மஞ்சள் நிறத்திலான ஆடைகளை வாங்கி தானம் செய்ய வேண்டும். இத்துடன் மஞ்சள் நிறத்திலான உணவையும் வாங்கி கொடுக்க வேண்டும். மஞ்சள் நிறம் புதன் கிரகத்திற்குரியதாக சொல்லப்படுகிறது.

இந்த திருச்செந்தூர் ஆலயத்தில் முருகப்பெருமான் குருவாக காட்சி தருகிறார். ஆகையால் இந்த ஆடை தானமும், உணவு தானமும் வற்றாத செல்வத்தையும் ராஜபோக வாழ்க்கையும் நீங்கள் பெற வழி செய்யும். இவற்றை எல்லாம் முடித்து வீடு திரும்பும் போது அங்கு பன்னீர் விபூதி கிடைக்கும் அதை வாங்கி வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் வெற்றிக்கு திலகமாக இட்டு வருவது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: அடைக்கவே முடியாத கடனையும் படிப்படியாக அடைக்க நிலை வாசல் படியில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை செய்தால் கோடி கடனும் கரைந்தே போகுமே!

வாழ்க்கையில் ஒரு முறை இந்த ஆலயத்தில் இப்படி வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி ஆகும். ஏனெனில் இந்த ஒரு வழிபாட்டில் அனைத்து தெய்வங்களின் அனுக்கிரகமும் சேர்த்து நம்மால் பெற முடியும். வாய்ப்புள்ளவர்கள் முடியும் போதெல்லாம் இந்த ஆலயம் சென்று வழிபடுவது மேலும் மேலும் சிறப்பை தரும். உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய ஒரு முறையேனும் இந்த முறையில் தான முறையுடன் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நிச்சயம் நல்ல பலனை அடைய முடியும்.

- Advertisement -