கோடி கணக்கில் கடன் சுமை இருந்து உங்களுக்கு தொல்லை தந்தாலும் கூட இந்த ஒரு படம் வீட்டிற்கு வந்தாலே போதும். பெரிய பெரிய கடன் சுமையும் சிறிதாக மறைந்து காணாமலே போகும்.

- Advertisement -

இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த கடன் சுமையானது பெரிய அளவு பாதித்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும் கடனை விரும்பி வாங்குவது கிடையாது. ஒரு சிலர் அனாவசிய செலவிற்காக வாங்கி துன்பப்படுபவர்கள் உண்டு. ஆனால் வேறு வழியே இல்லாமல் மருத்துவ செலவு, குடும்ப செலவு, கல்வி செலவு என செலவுகளை சமாளிக்க வழி தெரியாமல் கடன் வாங்கி சிக்கிக் கொண்டவர்கள் ஏராளம். இந்த சிக்கலில் தத்தளிப்பவர்களை எல்லாம் மீட்டெடுக்கக் கூடிய கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் நம் தோரண கணபதி. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கடன் அடைய தோரண கணபதி வழிபாடு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

கணபதி வழிபாடு கை மேல் பலன் கொடுக்கும் என்ற வார்த்தையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டதுண்டு. எந்த ஒரு தெய்வத்தையும் நாம் தேடி சென்று தான் வணங்க வேண்டும். நாம் தேடாமலே நாம் செல்லும் இடங்களில் எல்லாம் அமர்ந்திருந்து நமக்கு அருள் பாலிக்கும் தெய்வமாக இருப்பவர் இந்த கணபதி. இந்த கணபதியை நாம் மனதார நினைத்து வழிபாடு செய்தால் நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் காணாமல் போக செய்து விடுவார். இப்போது கடன் அடைய இந்த தோரண கணபதி எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

கடனடைய தோரண கணபதி வழிபாடு
நம்முடைய கடன்கள் அடைய தோரண கணபதியை செவ்வாய்க்கிழமைகளில் வணங்குவது விசேஷம் அல்லது சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் இவரை வணங்கலாம். இந்த மூன்று தினங்களில் ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். சக்தி தேவியார் தனித்திருக்கும் ஆலயங்களில் எல்லாம் தோரண கணபதி வீற்றிருப்பார். இது போன்ற ஆலயங்களில் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து கொள்ளலாம்.

இந்த தோரண கணபதிக்கு ஆறு வாரங்கள் 3 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அத்துடன் இவருக்கு நெய்வேத்தியமாக மா, மாதுளை, கொய்யா, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை படைத்து வணங்கினால் மிகவும் விசேஷம். இவற்றுடன் தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை உச்சரிக்க வேண்டும். தோரண கணபதி இதில் ருணம் என்பது கடன் குறிக்கும். இந்த கணபதி வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது தீராத கடன் தொல்லைகள் தீர்ந்து விடும்.

அதுமட்டுமின்றி இந்த தோரண கணபதியின் புகைப்படத்தை நம் வீட்டு வாயிலில் உள்ளே நுழையும் இடத்தில் வலது புறம் மாட்டி வைத்தால் வீட்டில் இருக்கும் கடன் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். தோரணம் என்பது நம்முடைய மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கட்டப்படுவது. அப்படியான இந்த தோரண கணபதி வாயிலில் இருக்கும் பொழுது நம் வீட்டில் இருக்கும் கடனால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்வார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குபேரனை இப்படி வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருக்குமா? குபேரனை பற்றி அறியாத ரகசியங்கள்!

இந்த வழிபாட்டை நீங்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து செய்யும் போதே உங்கள் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும் என்றும் கடன் அடைக்க நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் உங்களுக்கு கை மேல் பலன் கொடுக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -