கழுத்தை நெரிக்கும் கடன் கூட, கைநழுவி செல்ல அனுமனுக்கு இந்த ஒரு மாலையை கட்டி போடுங்கள் போதும்.

hanuman
- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடனிலிருந்து கூட சுலபமாக தப்பிக்க ஒரு வழிபாடு இது. சில பேருக்கு கடன் தொல்லையால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது. அந்த கடனை திருப்பித் தருவதற்கு உண்டான வழி கூட அவர்களிடம் இருக்காது. அதாவது நிறைய கடன் வாங்கி விட்டோம். அந்த கடனை திருப்பி கொடுக்க ஏதாவது சொத்து நகைகள் நம்மிடம் இருந்தாலும் பரவாயில்லை. அதை விற்று கொடுக்கலாம். எதுவுமே கையில் இல்லை. சம்பாதிக்கும் பணம் மூணு வேளை சாப்பிடத் தான் சரியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடனை அடைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இதில் கடனுக்கு வட்டியை வேற நாம் கட்ட வேண்டும். இந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட, 27 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் கடன் அடைவதற்கான ஒரு வழியை அந்த ஹனுமான் உங்களுக்கு காட்டித் தருவார்.

- Advertisement -

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யும் போது, பிரச்சனையை தீர்க்க ஏதாவது ஒரு வகையில் பணம் நிச்சயம் உங்கள் கைக்கு வரும். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். காலை ஆறு மணிக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 27 சுத்தமான கிழியாத வெற்றிலையை வாங்கிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் வெண்ணெயையும் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி வைத்த வெற்றிலைக்கு நடுவே இந்த எண்ணெயை தடவி வெற்றிலையை சுருட்டி, மஞ்சள் நூலில் மாலையாக கட்ட வேண்டும். (வெள்ளை நூலில் மஞ்சளை தடவி மஞ்சள் நூல் தயார் செய்து கொள்ளுங்கள்.)

வெண்ணெயை வெற்றிலையில் தடவும் போது, ‘இந்த வெண்ணை போல என்னுடைய கடன் என் கையை விட்டு நழுவி சென்று விட வேண்டும்’ என்று அனுமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே, இந்த மாலையை கட்டுங்கள். 27 வாரம் சனிக்கிழமை விடாமல் தொடர்ந்து இந்த மாலையை அனுமனுக்கு கட்டி போட்டால், கடன் தொல்லை தீரும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் கடன் இருக்கிறது. குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி, உங்கள் பிள்ளைகள், தாத்தா, பாட்டி என்று யார் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏனென்றால் 27 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவரால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் இன்னொருவர் இந்த மாலையை கட்டிப் போடலாம். வீட்டிலிருந்து ஒருவர் இந்த மாலையை கட்டிக் கொடுத்து, இன்னொருவர் கொண்டு போய் அந்த மாலையை அனுமனுக்கு சாத்தினாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி வரும் காத்து, கருப்பு, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி அடிக்க இந்த கருப்பு நிற பொருளை தலையை சுற்றி போட்டாலே போதும்.

27 வாரம் சனிக்கிழமை, 27 வெற்றிலைகளை கொண்டு தொடுத்த மாலை, அனுமனை நினைத்து இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். திருப்பிக் கொடுக்க முடியாத கடனை கூட திருப்பிக் கொடுப்பீங்க. இது முழுக்க முழுக்க அந்த ஹனுமன் மீது நம்பிக்கை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் தான். முழு மனதோடு முயற்சி செய்பவர்களுக்கு நிச்சயம் பரிகாரத்தின் மூலம் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -