கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி வரும் காத்து, கருப்பு, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி அடிக்க இந்த கருப்பு நிற பொருளை தலையை சுற்றி போட்டாலே போதும்.

prathiyagara
- Advertisement -

காத்து, கருப்பு, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற பல வகையான எதிர்மறை ஆற்றல்கள் இந்த பூமியில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது. நம்பியவர்களுக்கு இதன் மூலம் பிரச்சனை வரும். இப்படி பட்ட நெகட்டிவ் எனர்ஜியே இல்லை என்பவர்கள், இதை நம்பாதவர்களுக்கு இதனால் பிரச்சனையே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து பதிவை படித்து பலன் பெறலாம்.

உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மற்றவர்களுக்கோ இப்படி எதிர்மறை ஆற்றலின் மூலம் பிரச்சனை இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இந்த பரிகாரத்தை செய்யலாம். கண் திருஷ்டியின் மூலமாகவோ, அடுத்தவர்கள் ஏவி விட்ட எதிர்மறை ஆற்றலின் மூலமாகவோ உங்கள் குடும்பத்தில் கஷ்டம் வருகிறது என்ற சந்தேகம் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

நாம் எந்த பரிகாரத்தை தொடங்குவதற்கு முன்பும் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். குறிப்பாக இப்படி கெட்ட சக்தியின் ஆதிகத்திலிருந்து வெளிவர நாம் வழிபட வேண்டிய தெய்வங்கள் உக்கிர தெய்வங்கள். உக்கிரமாக இருக்கக்கூடிய அம்மன் தெய்வங்களை வழிபாடு செய்யலாம். நரசிம்மரை கூட வழிபாடு செய்யலாம். உதாரணத்திற்கு காளி கோயில், துர்க்கை அம்மன் கோயில், அங்காள ஈஸ்வரி கோவில், வாராஹி அம்மன் கோவில், பிரத்தியங்கிரா தேவி கோவில், இப்படி உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் இருந்தாலும் அந்த அம்மன் கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களை பிடித்த கஷ்டங்கள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இரண்டு மண் அகல் விளக்கங்கள் இதே போல ஏற்றுங்கள்.

இந்த விளக்கை வெள்ளிக்கிழமை ஏற்றலாம். செவ்வாய்க்கிழமை ஏற்றலாம். ஞாயிற்றுக்கிழமை ஏற்றலாம். இது தவிர இன்னொரு சிறிய பரிகாரமும் உள்ளது. இது தாந்திரீக ரீதியான பரிகாரம். ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது அமாவாசை இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு நமக்கு கரு மிளகு, கருஞ்சீரகம் இந்த இரண்டு பொருட்கள் தேவை. சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு. உங்கள் வீட்டில் இருக்கும் புதியதாக வாங்கிய மிளகாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கருஞ்சீரகம் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வெள்ளைத் துணியில் கருஞ்சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், வைத்து சிறிய முடிச்சாக அப்படியே கட்டிக் கொள்ளுங்கள்.

இதை பாதிக்கப்பட்டவருடைய தலையை சுற்ற வேண்டும். மூன்று முறை வலப்புறம். மூன்று முறை இடப்புறம். ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, இந்த முடிச்சை ஒரு மண் அகல் விளக்கில் வைத்து கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கற்பூரம் போட்டு கொளுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் லட்சுமி குபேர பூஜையை, நம் இல்லத்தில் மிகவும் எளிமையாக இப்படியும் வழிபாடு செய்யலாம்.

இதை வீட்டிற்குள் வைத்து கொளுத்தக் கூடாது. உங்கள் வீட்டு நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைத்து கொளுத்தி விடுங்கள். உங்களை பிடித்த கெட்ட சக்தி அனைத்தும் அந்த நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போய்விடும். மாதத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்து வரும்போது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் உடம்பை பிடித்திருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகும். உங்களுடைய குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -