எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் கடன் பிரச்சனை தீர வில்லையா? உடனே இந்தப் பரிகாரத்தைச் செய்து கடன்தொல்லையில் இருந்து விடுபடுங்கள்

kadan
- Advertisement -

அதாவது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை, பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் கடனாளியாக இருக்கின்றனர். அவரவர் தகுதிக்கு ஏற்ப அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், குடும்ப சூழ்நிலைக்காகவும் எங்காவது ஒரு இடத்தில் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை வாங்கும் பொழுது அதனை எப்படியாவது விரைவாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கிவிட்டு, சில நாட்கள் கழித்து அவற்றை திருப்பி கொடுக்க முடியாமல் மன வேதனைக்கு ஆளாகிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த கடன் சுமையை அவர்களால் குறைக்க முடிவதில்லை. அவ்வாறு கடன் தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பலர் இந்த சின்ன சின்ன பரிகாரங்களை செய்து வரும் பொழுது கடன் தொல்லையில் இருந்து விரைவாக விடுபட முடியும். வாருங்கள் அது என்ன பரிகாரங்கள் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலரிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். பார்க்கும் மற்றவர்களுக்கு நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நம்மிடம் மட்டும் பணம் இல்லையே என்ற வருத்தம் இருக்கும். இவ்வாறு பணம் ஒருவரிடம் சேர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அவர்களிடம் மகாலட்சுமியின் அருள் நிறைந்தாருக்கிறது என்றும் சொல்லலாம். லட்சுமிதேவியின் அருள் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் வற்றாத செல்வம் எப்பொழுதும் நமது வீட்டில் நிலைத்திருக்கும்.

- Advertisement -

எனவே நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது போல் லட்சுமிதேவி நமது வீட்டில் வாசம் செய்வதற்கு நமது வீட்டை சரியான முறையில் வைத்துக் கொள்ளவேண்டும். எப்பொழுதும் வீடு நறுமணத்துடன் இருக்க வேண்டும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமையில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

அதேபோல் வியாழக்கிழமை தோறும் குபேரபூஜை செய்துவர நமது வீட்டில் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும். அவ்வாறு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது காமாட்சி அம்மன் விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கை எப்பொழுதும் சிம்மாசனத்தில் தான் வைக்க வேண்டும். வெறும் தரையில் வைத்து விளக்கு ஏற்றக்கூடாது. விளக்கின் அடிப்பகுதியில் ஒரு தாம்பூலத்தட்டு வைத்து, அதில் மஞ்சள் அரிசி, சிறிதளவு பூ சேர்த்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் விளக்கினுல் சிறிய துண்டு பச்சை கற்பூரம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றையும் போட்டு வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். அவ்வாறு வெள்ளிக்கிழமை செய்யும் பூஜையில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் 14 வாரங்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் திருப்பி கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கடன் பிரச்சினை உடனே தீந்துவிடும்.

அதற்கு வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் பூஜை செய்யவேண்டும். பூஜை செய்யும்பொழுது 5 வெற்றிலை, ஐந்து கொட்டைப் பாக்கு மற்றும் 5 ஒரு ரூபாய் நாணயங்கள் இவற்றை ஒன்றாக, பூஜை அறையில் சுவாமியின் முன் வைத்து, உங்கள் மனதிற்குள் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் கடன் பிரச்சனையை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவாக நான் இந்த கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, ஒரு நாள் முழுவதும் அதனை அங்கேயே வைத்துவிட்டு, பின்னர் அதனை ஒரு பேப்பரில் மடித்து உண்டியலில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு 14 வாரங்கள் தொடர்ந்து செய்து இந்த தொகையை கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். பின்னர் உங்கள் கடன் பிரச்சனை உடனே சரியாக வாய்ப்பு கிடைத்துவிடும்.

- Advertisement -