கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? வெற்றிலையை இப்படி செய்து பாருங்கள், தீரா கடனும் விரைவில் தீருமாம்!

vetrilai-cash-kuberan
- Advertisement -

பணத் தேவை எல்லா வகையான மனிதர்களுக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மீறிய ஆசை இருந்தால் கடன் பிரச்சனையில் மூழ்க வேண்டி இருக்கும் என்று எவ்வளவு அறிவுறுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் ஆசைக்கு எல்லையே இல்லாமல் கடன் வாங்குபவர்களும் உண்டு. இவ்வாறாக இல்லாமல் அவசிய செலவுக்காக கையில் பணம் இல்லாமலும், கடன் வாங்குவது உண்டு. இப்படி எந்த வகையில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும் அது விரைவில் தீர்வதற்கான எளிய வழியை கொடுக்குமாம் வெற்றிலை! தீரா கடன் தீர இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கடன் பிரச்சனை தீர்வதற்கு முதலில் சனிக்கிழமை தோறும் பைரவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர் சாற்றி பைரவரை துதித்து, மிளகு தீபம் ஏற்றி, அங்கு கொடுக்கும் விபூதியை எடுத்துக் கொண்டு வீட்டில் வந்து வையுங்கள். மாமலை போல் இருக்கும் பிரச்சனையையும் பனி போலாக்கும் சக்தி இவருக்கு உண்டு. எடுத்துக் கொண்டு வந்த இந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வரக்கூடிய லாபம் பன்மடங்கு பெருக துவங்கும்.

- Advertisement -

இரண்டாவது பரிகாரமாக நீங்கள் வெற்றிலையை வைத்து இதை செய்து பாருங்கள். பச்சைக் கற்பூரத்தின் மகிமை எல்லாருக்கும் தெரியும். இது பணத்தை ஈர்க்கும் என்று கூறுவார்கள். இது நியாயமான வழியில் சம்பாதிப்பவர்களுக்கு அவர்களுடைய வருமான தொகையை லாபகரமாக மாற்றி தரக்கூடிய விஷயமாக இருப்பதால் வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொண்டு, பூஜை அறையில் ஒரு மரத்தாலான சிறிய பெட்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது மண் கலனை எடுத்துக் கொள்ளலாம்.

முந்தய காலங்களில் எல்லாம் பணத்தை சேர்த்து வைப்பதற்கு மண் உண்டியலை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். அதில் பச்சை கற்பூரத்தை வைத்து பணத்தை சேகரித்து வாருங்கள். இந்த பணம் உங்களுக்கு இருக்கும் கடனை அடைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் தொகையை அடைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் சேர்க்கப்படும் இந்த பணமானது விரைவாக சேர்வதற்கு நீங்கள் குபேர விளக்கு வியாழன் கிழமையில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி குபேர விளக்கு ஏற்றுபவர்கள் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வெற்றிலையில் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பு நீக்கி விட்டு ஐந்து ரூபாய் நாணயத்தை அதன் மீது வைத்து நான்காக மடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு நூல் கொண்டு நன்கு நாணயம் வெளியில் வராமல் கட்டிக் கொள்ளுங்கள். இதனை வியாழக்கிழமை குபேர விளக்கு ஏற்றியவுடன் நீங்கள் சேர்த்து வைக்கும் பணப் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் குபேர பூஜை செய்யும் பொழுது குபேரன் படத்தை வைத்து, குபேர விளக்குக்கு அடியில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து தீபம் ஏற்றி மேலும் இந்த வெற்றிலையில் ஐந்து ரூபாய் நாணயத்தை மடித்து பணம் சேரும் இடத்தில் வைத்து விட வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்த வெற்றிலையை மாற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அதில் விரைவாக பணம் அதிகரித்து எளிதில் கடனும் தீரும் என்பது நியதி. வெற்றிலயில் சேர்க்கும் நாணயத்தை சேர்த்து கோவில் உண்டியலில் போடுங்கள். விளக்கிற்கு அடியில் வைக்கும் நாணயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -