வாங்கிய கடன் அடையாமல் கடல் போன்ற பெருகிக்கொண்டே செல்கிறதா? அப்பொழுது உங்கள் கடன் தீர நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதை மட்டும் தான்

kadan
- Advertisement -

காலம் காலமாக சமுதாயத்தில் மனிதனின் நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்கின்றன. அவ்வாறு தங்களிடம் இருக்கும் செல்வத்தை பொறுத்து ஒருவர் உயர்ந்தவராகவும், செல்வம் குறைந்தவர்கள் தாழ்ந்தவராகவும் பார்க்கப்படுகின்றனர். செல்வம் அதிகம் உள்ளவர்களிடம் அதிகாரமும் அதிகமாக இருக்கும். செல்வம் குறைந்தவர்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய நிலைமை இருக்கும். ஏனென்றால் இவர்கள் தங்களின் வறுமைநிலைக்காக மற்றவரிடம் கடன் வாங்கியிருப்பார்கள். அந்தக் கடனைத் திருப்பித் தர முடியாமல் தன்னால் நினைத்ததை கூட தைரியமாக பேச முடியாமல் பல நேரங்களிலும் ஒதுங்கியே இருப்பார்கள். இவ்வாறான பிரச்சினைகள் பெரும் மன உளைச்சலை தான் கொடுக்கிறது. எனவே இவற்றில் இருந்து விரைவில் விடுபட இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். வாருங்கள் அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

five-rupee-coins

நமது முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதனை யோசித்து தான் செய்துள்ளனர். அவர்கள் பின்பற்றி வந்த அனைத்து விஷயங்களுக்கும் பின்னாலும் பல ரகசியங்கள் புதைந்து காணப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரு சாதாரண விஷயம் என்றாலும் அதனை பின்பற்றி வருவதன் மூலம் நமக்கு பல பலன்கள் கிடைக்கின்றன. இது என்ன இதனை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்று உதாசினமாக நினைத்தோம் என்றால் அது நமக்கு தான் நஷ்டத்தை கொடுக்கிறது.

- Advertisement -

அவ்வாறு நமது முன்னோர்கள் கடன் வாங்குவதற்கும், கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும் தகுந்த நேரத்தை பார்த்துதான் செய்திருக்கின்றனர். இப்பொழுதுள்ள நாம் திருமணத்திற்கு நல்ல நேரம் பார்க்கின்றோம், அவ்வாறு வீடு கட்டுவதற்கும், பூஜைகள் செய்வதற்கும் என நல்ல நேரம் பார்த்து தான் செய்கின்றோம். இவ்வாறு சுப காரியங்களுக்கு மட்டுமே நாம் நேரத்தை கணக்கிடுகிறோம். ஆனால் அவர்கள் இந்த கடனை திருப்பித் தருவதற்கு தகுந்த நேரத்தை பின்பற்றிதான் நடந்திருக்கின்றனர்.

kadan

அவ்வாறு கடனை அடைப்பதற்காக ஒரு சிறப்பு வாய்ந்த நேரம் என்று ஒன்று இருக்கிறது. அது மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் மட்டும் நீங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடல் போன்ற கடன் இருந்தாலும் அது கடுகு போன்று குறைய ஆரம்பித்து விடும். இதனை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

- Advertisement -

இந்த மைத்ரேய முகத்திற்கு முன்னர் கடன் வாங்கியவர் கடனைத் திரும்பக் கேட்டாலும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அதனை மறு நாளைக்கு தள்ளி வையுங்கள். இந்த மைத்ரேய முகூர்த்தம் நீங்கள் ஒரு லட்சம் கடனாக வாங்கி இருந்தாலும் அதில் ஒரு சிறிய தொகையாக ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரமாவது கடன் வாங்கியவரிடம் திருப்பிக் கொடுத்து நான் சிறிது சிறிதாக உங்கள் கடனை அடைத்து விடுவேன் என்று கூறுங்கள். இவ்வாறு ஒரு சிறிய தொகையை அந்த மையத்ரேய முகூர்த்தத்தில் அவரிடம் கொடுக்கும் பொழுது அவரிடம் வாங்கிய கடன் விரைவில் அடைந்துவிடும்.

cash-box

கடன் வாங்கியவர் உங்களுக்கு மிக தொலைவில் இருந்தார் என்றால் அவருக்கு ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலமும் மைத்ரேய முகூர்த்தில் பணம் அனுப்பி வையுங்கள். அப்படி அதையும் செய்ய முடியாவிட்டால் ஒரு பச்சை நிற டப்பாவில் சரியாக மைத்ரேய முகூர்த்தம் தொடங்கியவுடன் சிறிதளவு தொகையை அவரின் பெயரைச் சொல்லி அந்த டப்பாவில் போட்டு வையுங்கள். இவ்வாறு சிறிய தொகையை டப்பாவில் சேர்த்து வைப்பதன் மூலம் விரைவில் உங்கள் கடன் தொகை முழுவதுமாக அடைந்து விடும். டிசம்பர் மாதம் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 1.56 மணி முதல் 3.43 மணிவரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. இந்த தினத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -