தீராத கடன் சுமை தீர, கல்லுப்பை வீட்டில் இந்த இரண்டு இடத்தில், இப்படி வைத்தாலே போதும்.

uppu-cash-salt
- Advertisement -

தீராத பணப்பிரச்சனை, வறுமை, கடன் தொல்லை, வீட்டில் தொடர்ந்து அடுத்தடுத்து கஷ்டங்கள், என்று வருவதற்கு காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். நமக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் கண்ணுக்கு தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு, அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் கல்லுப்பு. கல் உப்பை வைத்து நம்பிக்கையுடன் நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் அனைத்தும் நிச்சயமாக ஒரு நல்ல பலனைக் கொடுக்கும். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bathroom

நாம் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத அளவிற்கு பணப் பிரச்சனை, வாங்கிய கடனை படிப்படியாக திருப்பி கொடுப்பதற்கான நல்ல நேரம் அமைய வேண்டுமென்றால், வருமானம் அதிகரிக்க வேண்டுமென்றால், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். ஒரு சிறிய பவுலில் கல் உப்பை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அந்த கல் உப்பை குளியலறையில் ஏதாவது ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். நீங்கள் குளிக்கும் போது அந்த தண்ணீர், உப்பின் மேல் படக்கூடாது. அவ்வளவு தான். சோப்பு வைக்கக்கூடிய அலமாரியில் இந்த கல் உப்பை வைத்தால் கூட போதும். ஆனால் கல் உப்பை வைத்து விட்டு அதன் மேல் எந்த மூடியையும் போட்டு மூட கூடாது. அலமாரியை சாத்தியும் வைக்கக் கூடாது.

- Advertisement -

இப்படி குளியலறையில் கல்லுப்பை வைத்துவிட்டு நீங்கள் குளிக்கும் போது, உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை இந்த கல்லுப்பு உள் வாங்கிக்கொள்ளும். தினம் தினம் குளித்து முடித்த பின்பு இந்த பூமியில் புதியதாக பிறந்தது போல உணர்வீர்கள். அதன் பின்பு நீங்கள் மன குழப்பம் இல்லாமல் செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக வெற்றியை தரக்கூடியதாக அமையும். பின்பு எல்லாம் நல்லபடியாக நடக்கும். இது முதல் பரிகாரம்.

hall

அடுத்தபடியாக ஒரு சிறிய கண்ணாடி பவுலிலோ, அல்லது பீங்கான் பவுலிலோ கல் உப்பை நிரப்பி, அதன் மேலே ஒரு நெல்லிக்காயை வைத்து, இதை அப்படியே வீட்டின் வடகிழக்கு மூலையில், வரவேற்பறையில் வைத்து விடவேண்டும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், குறிப்பாக பணவரவிற்கு தடையாக நிற்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அந்தத் தடையை தகர்ப்பதற்கு இந்த கல்லுப்பும் நெல்லிக்காயும் உங்கள் வீட்டில் துணையாக நிற்கும்.

- Advertisement -

இந்த உப்பை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது. 10 நாட்களுக்கு ஒரு முறை பழைய உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, அந்த தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள். மீண்டும் அந்த பாத்திரங்களை கழுவி புது கல் உப்பை நிரப்பி பின் அந்த இடத்திலேயே வைத்து விடுங்கள். (பழைய நெல்லிக்காயை வாடும் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். நெல்லிக்காய் வாடிய பின்பு கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புது நெல்லிக்காயை வைக்க வேண்டும்.)

வீட்டில் எப்போதும் ஒரு நெல்லிக்காய் இருப்பது, குறிப்பாக கல் உப்பின் மேல் இருப்பது வீட்டிற்கு நல்லதொரு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். தொடர்ந்து இந்த கல்லுப்பு பரிகாரத்தை செய்துவர உங்கள் வீட்டில் பண கஷ்டம் மட்டுமல்லாது, தேவையற்ற பிரச்சனைகள் வருவதும் குறைய தொடங்கும். அனாவசியமாக அடுத்தவர்களுடைய கண் பார்வை பட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் சந்தோஷம் நிலை குலையாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன சுலபமான பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -