கடன் தொல்லையில் சிக்கி சின்னாபின்னமானவர்கள், எப்படியாவது இந்த 1 விலங்கை உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும். கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவரலாம்.

sanibagavan
- Advertisement -

இக்கட்டான சூழ்நிலையில் அவசரத்திற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. கைநீட்டி கடன் வாங்கி விட்டோம். கடன் வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. வட்டியை மட்டும் தான் கட்ட முடிகிறது. எவ்வளவோ கஷ்டப்பட்டும் அசல் தொகையை கட்ட முடியவில்லை. வட்டி கட்ட முடியாமல், அந்த பண கஷ்டத்திற்கு மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இப்படி ஒருவருடைய வாழ்க்கையில் கடன் பிரச்சனை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வந்தால், அவர்களால் நிச்சயம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது. ஒருவேளை சாப்பாட்டை கூட நிம்மதியாக சாப்பிட முடியாது. கைநீட்டி கடன் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் அந்த கஷ்டம் புரியும். அவ்வளவு கடன் கஷ்டத்தில் தத்தளிப்பவர்கள் கூட எளிமையாக அந்த பிரச்சனையில் இருந்து விடுபட, ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது.

இதைப் படித்துவிட்டு எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால் உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கிறது அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் நம்பிக்கை இருந்தாலும் சரி, நம்பிக்கை இல்லை என்றாலும் சரி இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபட பல வழிகளை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

கடனை தீர்க்கும் கரடி பரிகாரம்:
சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கடன் தொல்லையில் சிக்கி இருப்பவர்கள், கரடியை ஒருமுறை பார்க்க வேண்டும். ஆமாங்க, கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவதற்கு இது ஒரு சூட்சமமான பரிகாரம். அந்த காலத்தில் சொல்வார்கள். கரடி முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று. அதிகமாக கடன் தொல்லை உள்ளவர்கள் சனிக்கிழமை கரடியை பார்த்தால் அவர்கள் பிரச்சனை தீரும்.

இந்த காலத்தில் கரடியை எங்கு போய் தேடிப் பிடிப்பது. வண்டலூர் ஜூ அல்லது வேறு ஏதாவது பார்க்குக்கு சென்றால், கூண்டில் கரடியை அடைத்து வைத்திருப்பார்கள். அந்த இடத்திற்கு சிரமம் பார்க்காமல் சென்று, கரடியை ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு வாருங்கள். நீங்கள் கரடியை பார்த்தால் ரொம்ப நல்லது. அதே கரடி மீண்டும் திரும்பவும் உங்களைப் பார்த்தால் உங்களுக்கு இன்னும் ராஜ யோகம் தான். அதற்காக அந்த கரடியை போய் துன்புறுத்தக் கூடாது. உங்களுக்கு ஆபத்து வரும்படி எந்த வேலையும் செய்து விடாதீர்கள். தூரத்தில் நின்றபடி ஒரு பத்து நிமிடம் நீங்கள் கரடியை பார்த்தீர்கள் என்றால், ஒரு நிமிடம் அது உங்களை திரும்பிப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

இதே போல விலங்கியல் பூங்காவில் மிருகத்திற்கு உணவு வாங்கி கொடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், கரடி சாப்பிடக்கூடிய உணவாக பார்த்து ஏதாவது ஒரு உணவை அந்த பூங்கா ஊழியரிடம் தானமாக கொடுப்பதும் கடன் பிரச்சனையை தீர்க்கும். நீங்கள் கொடுத்த உணவை அவர்கள் கரடிக்கு சாப்பிட கொடுத்தால், உங்களுடைய கடன் கரையும். நம்ப முடியவில்லையா. எவ்வளவு செய்து விட்டோம் இது ஒரு எளிமையான ஆன்மீகம் பரிகாரம். செய்து தான் பார்ப்போமே. இதன் மூலம் கடன் பிரச்சனை குறைந்தால் சந்தோஷம் தானே.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றுங்கள். செவ்வாய்க் கிழமையோடு வந்திருக்கும் இந்த அற்புதமான அஷ்டமி நாளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜாதகத்தில் குறிப்பாக சனி கேது சேர்க்கை இருந்தால், கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் அவர்களுக்கு கை மேல் பலன் உடனடியாக கிடைக்கும். சனிபகவான் கருப்பு நிறம், கேது ரோமங்களை குறிக்கிறது. ஆக கருப்பு நிறத்தில் ரோமங்களோடு இருக்கும் கரடி, இந்த சனி கேது சேர்கைக்கு உரிய ஒரு விலங்காக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -