கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றுங்கள். செவ்வாய்க் கிழமையோடு வந்திருக்கும் இந்த அற்புதமான அஷ்டமி நாளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

bhairavar better ground cash
- Advertisement -

கடன்கள் தீர வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்கள் இரண்டு பேர். ஒன்று முருகப்பெருமான் இன்னொருவர் பைரவர். இவர்களை தொடர்ந்து வழிபடும் போது கடன் சுமை படிப்படியாக குறையும். பைரவருக்கு அஷ்டமியில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் இந்த அஷ்டமி மங்கள வார அஷ்டமி என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் ஏற்றும் தீபம் பல மடங்கு பலனை கொடுக்கும். அந்த தீபம் எப்போது எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபம் ஏற்றும் வேளையில் அஷ்டமி திதி இருக்க வேண்டும். அதாவது இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நாளை மாலை 3 மணி இந்த அஷ்டமி முடிகிறது. அதே போல் அஷ்டமியில் கடன் தீர ஏற்றப்படும் இந்த தீபம் இரவு 8 மணிக்கு ஏற்றுவது சிறந்தது. முடியாதவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்றுவது நல்ல பலனைத் தரும். அந்த வகையில் இந்த தீபத்தை இன்று இரவு ஏற்றுவது உத்தமம்.

- Advertisement -

கடன் தீர பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றும் முறை
இந்த தீபம் ஏற்ற முதலில் 35 மிளகாய் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு அகல் விளக்கு சிகப்பு நிற துணி, வேப்பம் எண்ணெய் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு பைரவர் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு பைரவர் முன்பு இந்த அகல் விளக்கை வைத்து, அதில் நீங்கள் எடுத்துச் சென்றிருக்கும் மிளகை சிகப்பு நிற துணியில் ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அந்த முடிச்சை விளக்கில் வைத்து வேப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபம் ஏற்றும் போது உங்களுக்கு இருக்கும் கடன் தீர வேண்டும் என்று மனதார பைரவரிடம் வேண்டிக் கொண்டு அவரை எட்டு சுற்றுகள் சுற்ற வேண்டும்.

இந்த தீபத்தை தொடர்ந்து எட்டு அஷ்டமியில் ஏற்ற வேண்டும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று மாதத்தில் இரண்டு அஷ்டமிகள் என 8 அஷ்டமிகள் தீபம் ஏற்ற வேண்டும். நான்கு மாதங்களில் இந்த தீபம் ஏற்றும் பரிகாரம் முடிந்து விடும். இதற்குள்ளாகவே உங்கள் கடன் அடைவதற்காக வாய்ப்புகளை பைரவர் ஏற்படுத்தித் தருவார்.

- Advertisement -

இதிலும் நீங்கள் சொல்ல முடியாத அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள், அதை தீர்க்கவே வழி தெரியாது இருக்கிறீர்கள் என்றால் இதே தீபத்தை ஒரு பாகற்காயை இரண்டாக நறுக்கி அதில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு, இதே போன்று 35 மிளகாய் ஒரு முடிச்சாக கட்டி ஒரு புறம் வைத்து அதை ஒரு விளக்காகவும், மறு புறம் வெறும் வேப்ப எண்ணெய் மட்டும் ஊற்றி ஒரு விளக்காக ஏற்றினால், தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும். இந்த தீபத்தை ஏற்றும் போதும் தொடர்ந்து 48 நாட்கள் மாலை வேலையில் தவறாமல் ஏற்ற வேண்டும். பெண்கள் மாத விலக்கு நேரத்தில் இதை தவிர்த்து விட்டு, பிறகு தொடர்ச்சியாக ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர ஏலக்காய் பரிகாரம்

நாம் எந்த ஒரு செயலும் செய்யும் போது அதில் நம்பிக்கையும், உண்மையான தெய்வ பக்தியும் இருந்தால் அதற்கு நிச்சயம் தெய்வம் செவி சாய்க்கும். அது போல நீங்கள் பக்தியுடன், நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றி வரும் போது கடன் அடைவதற்கான வழிகள் பிறந்து கடன் அடைந்து, நல்லதொரு வாழ்வை வாழ்வதற்கான வழி பிறக்கும்.

- Advertisement -