ஏழு வாரம் திங்கட்கிழமை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் எவ்வளவு பெரிய கடனும் காணாமல் போகும்.

sivan3
- Advertisement -

கோடியில் ஒருத்தரை கூட இன்று கடன் இல்லாமல் நம்மால் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் கடனாளியாக தான் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்கவில்லை என்றாலும் தங்களுடைய தங்க நகையாவது அடமானத்தில் இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் கடன் கடன்.

இந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு கோடிக்கணக்கில் தாந்திரீக ரீதியாக ஆன்மீக ரீதியாக நமக்கு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இதில் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏழு வாரம் பின் சொல்லக்கூடிய கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்.

- Advertisement -

கடன் இருந்த இடமே தெரியாமல் அழியும். கடன் பிரச்சனை தீர்க்கும் கோவில்கள் என்னென்ன அந்த கோவில்களில் எப்படி வழிபாடு செய்வது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த பதிவில் இரண்டு கோவில்கள் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களால் எந்த கோவிலுக்கு செல்ல முடியுமோ கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அந்த கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறையை மேற்கொள்ளும் போது நிச்சயம் கடன் பிரச்சனை தீரும்.

கடன் பிரச்சனை தீர செல்ல வேண்டிய கோவில்கள்

முதல் கோவிலை பார்த்து விடுவோம். இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் திருச்சேறை என்று சொல்லப்படும் ஊரில் சார பரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவர் ஞானத்தை கொடுக்கும் ஈசன் ஆகத்தான் சொல்லப்பட்டுள்ளார். இவரை வழிபாடு செய்தால் நமக்கு ஞானம் பிறக்கும்.

- Advertisement -

ஆனால் இதே கோவிலில் விநாயகர் சிலைக்கு பக்கத்திலேயே ருண விமோசன ஈசன் அருள் பாவிக்கிறார். இவரைத்தான் கடன் நிவர்த்தீஸ்வரர் என்று நாம் அழைக்கின்றோம். இவரை திங்கட்கிழமை தோறும் வழிபாடு செய்து வந்தால் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். ஏழு வாரம் திங்கட்கிழமை உங்கள் கையால் பசும்பாலை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து அந்த சிவலிங்கத்தை ஏழு முறை வலம் வந்து வழிபாடு செய்யவும்.

இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள திருக்கோவில் திருவாரூர் தியாகராயர் கோவிலில், ருண விமோசன ஈசன் இருக்கின்றார். அங்கு சென்றாலும் இவரை வழிபாடு செய்யலாம். அதே போல தான் ஏழு வாரம் திங்கட்கிழமை ருண விமோசனருக்கு பசும்பால் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து கடன் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டாலும் உங்கள் கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

எங்களுடைய வீட்டில் இருந்து இந்த கோவில்கள் எல்லாம் வெகு தொலைவில் உள்ளது எங்களால் ஏழு வாரம் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை. ரொம்பவும் அதிகப்படியான கடன் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு வாரம் திங்கட்கிழமையாவது கட்டாயம் நீங்கள் இந்த ஈசனை சென்று ஒரு முறை தரிசனம் செய்து விட்டு வருவது நல்லது.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்

அடுத்த அடுத்த திங்கட்கிழமைகள் வீட்டிலிருந்தபடியே இந்த ருண விமோசன ஈசனை மனதார நினைத்து வழிபாடு செய்யலாம். மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் போதும. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த இரண்டு பரிகாரங்களை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -