வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்

vinayaagar pary lady
- Advertisement -

முழு முதல் கடவுள், எளிமையான தெய்வம், விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரன், கணேசன், பிள்ளையார் இப்படி பல கோடி நாமங்களை கொண்டவர் தான் விநாயகர். எளிய மக்களும் நினைத்தவுடன் அவரை வணங்க கூடிய வகையில் காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் இந்த விக்னேஸ்வரன் தான்.

அப்படியான இந்த எளிமையான தெய்வத்தை நாம் ஒரு கணம் நினைத்தாலே போதும். நம்முடைய வினைகள் அனைத்தும் தீர்ந்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும். இவர் எப்படி எளிமையான தெய்வமோ அதே போல் இவருடைய வழிபாடும் மிக மிக எளிமை தான். இவரை வழிபட எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை.

- Advertisement -

நம்மை சுற்றி இருக்கும் அருகம்புல்லும் , எருக்கம் பூவும் இருந்தாலே போதும். இவரின் அனுகிரகத்தை பெற்று விடலாம். அப்படியான இந்த எளிய தெய்வத்தை இன்னும் எளிமையாக நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாக்காத யோகங்களை பெறலாம். அது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் நினைத்தது யாவும் நடக்க

எந்த தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கென தனியான வழிபாட்டு முறைகள் இருக்கும். விரத முறைகள் இருக்கும் ஆனால் இவருக்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. ஒரே ஒரு அருகம்புல்லை வைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும் உடனே அருள் பாலித்து விடுவார்.

- Advertisement -

அப்படியான இந்த அருகம்புல்லை மாலையாக தொடுத்து போட்டு இவரை வணங்கும் போது இவருடைய அருள் பல மடங்கு கிடைக்கும். இந்த அருகம்புல் மாலை வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அருகம்புல்லை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை மாலை தொடுக்க வேண்டும். அப்படி தொடுக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் கம் கணபதியே நமக
என்ற இந்த நாமத்தை ஒவ்வொரு அருகம்புல்லை எடுத்து தொடுக்கும் பொழுதும் சொல்ல வேண்டும். இது போல 108 முறை சொல்ல வேண்டும். அருகம்புல் நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை வைத்து தொடுக்கும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களுக்கான மனக்கவலை பிரச்சனைகள் அனைத்தையும் அவர் தீர்த்துக் கொண்டே வருவார். இது தீர வேண்டும் என்று கூட நீங்கள் அவரிடம் கேட்க வேண்டியது கிடையாது. அதே போல் இந்த வழிபாடு செய்யும் நாட்களில் வாரத்திற்கு ஒரு நாள் அவருக்கு சதுர் தேங்காய் உடைத்து பூஜை செய்யுங்கள்.

மாதங்களில் வரும் சதுர்த்தி திதி, சங்கட சதுர்த்தி போன்ற விசேஷமான நாட்களில் இந்த சதுர் தேங்காய் பூஜையை தவறாமல் செய்து வாருங்கள். 48 நாட்கள் முடிவதற்குள்ளாகவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்தும் பார்க்காத பெரிய மாற்றத்தை உங்களுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற இதை செய்தாலே போதும்

இந்த அருகம்புல் மந்திர மாலை வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து விநாயகரின் பரிபூரண அருளை முழுமையாக பெறலாம். வாழ்க்கையில் எல்லா நலன்களையும் ஒரு சேர பெற்று இன்பமாய் வாழ இந்த வழிபாடு வழிவகுக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -