அதிகப்படியான கடன் தொல்லையிலிருந்து மீள இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உடனே இதற்கான பலனை நீங்கள் உணர துவங்குவீர்கள்.

milagu
- Advertisement -

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன். இந்த இலங்கை வேந்தன் இராவணனை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். எப்பேற்பட்ட ஆளுமை வாய்ந்தவன். அவனின் துன்பத்திற்கே எடுத்துகாட்டாக, கடன்பட்டவர்களின் நிலையை கூறினார்கள், என்றால் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கடன் எப்பேர்பட்டவர்களையும் கலங்க செய்து விடும். கடன் வாங்கி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை தான் முதலில் கைவிட வேண்டும்.

வரவில் சேமித்து வைத்து செலவுகள் ஏற்படும் போது அந்த சேமிப்பில் இருந்து எடுத்து செலவு செய்து வாழ பழக வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, கடன் வாங்கி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடாது.

- Advertisement -

இதையும் மீறி நாம் சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அப்படி வாங்கிய கடன் சிலரால் எந்த சூழலிலும் திருப்பித் தர முடியாமல் தவிப்பார்கள். ஏன் அதை அடைக்க கூடிய அளவிற்கு வருமானமே வந்தாலும் ஒரு சிலரிடம் வாங்கிய கடனை மட்டும் நம்மால் திருப்பிக் கொடுக்க முடியாது. அதனால் தான் கடன் வாங்கும் போது கூட நேரம் காலம் பார்த்து வாங்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். சரி நாம் அப்படி வாங்கி விட்டோம். ஆனால் அந்த குறிப்பிட்ட நபரிடம் வாங்கிய கடனை என்னால் திருப்பி அடைக்கவே முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த கருமிளகு பரிகார முறையை செய்து பாருங்கள்.

இந்த பரிகாரத்தை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு குளித்து முடித்த பின் பூஜை அறையில் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு சிகப்பு துணி எடுத்து அதில் 10 கரு மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கும், கொஞ்சம் சில்லரை காசுகள் இவை மூன்றையும் ஒன்றாக அந்த சிகப்பு துணியில் வைத்து ஒரு முடிச்சாக போட்டுக் கொள்ளுங்கள். இதை மண்பானையோ அல்லது குடுவையோ ஏதாவது ஒன்றில் இந்த முடிச்சை போட்டு விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் யாரிடம் வாங்கிய கடன் அடையவில்லையோ அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி ‘இவரிடம் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும்’ என எழுதி, இந்த குடுவையில் போட்டு விடுங்கள். உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த கடனை அடைக்கும் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள். இந்த குடுவை பூஜை அறையில் இருந்தாலும் சரி, நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் இருந்தாலும் சரி, ஆனால் யாரும் கை பாடாத இடமாக பார்த்து வைத்து விடுங்கள்.

பரிகாரத்தை செய்து விட்டோமே, என்று நாம் அமர்ந்து கொண்டே இருந்தால் கடன் அடைந்து விடாது. அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அந்த முயற்சி கட்டாயம் பலன் அளிக்கக்கூடிய ஆற்றலை இந்த பரிகாரம் தரும். தினந்தோறும் தீபம் ஏற்றும் போது இந்த கடன் அடைய வேண்டும் என்று சொல்லி வேண்டிக் கொண்டே வாருங்கள். விரைவிலே உங்கள் கடன் அடைந்துவிடும்.

கடன் அடைந்த பிறகு இந்த நாணயத்தை கோவிலுக்கு தர்ம காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொட்டைப்பாக்கையும், கருமிளகையும், ஓடும் நீர் நிலையில் விட்டு விடுங்கள். இல்லை எனில் யாரும் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரம் நிச்சயமாக உங்கள் வாழ்வில் கடன் பிரச்சினை நீக்கி ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

- Advertisement -