வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே நாட்களில் அடைத்துவிட்டு ஐஸ்வர்யத்தோடு வாழலாம்.

rose
- Advertisement -

வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்தால் போதும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். அதை விட்டுவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் கொடுத்து, வீட்டில் சண்டை. அது போதாது என்று வீட்டு பெண்களின் நகையை எல்லாம் அடமானம் வைத்து, வட்டியை கட்ட வேண்டிய நிலைமை. இந்த கடனை நான் கூட வாங்கவில்லை. என்னுடைய அண்ணன் வாங்கினான். என்னுடைய அப்பா வாங்கினார். அந்த கடனை இன்று வரை திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம் என்பவர்கள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்யலாம். பெரிய அளவில் கடன் கிடையாது. சின்ன கடன் தான். இந்த கடனை திருப்பிக் கொடுத்து விட்டால் என் குடும்பம் சந்தோஷம் பெறும், என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

கடனை அடைக்கும் ரோஜா பூ பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு 5 சிவப்பு நிற பன்னீர் ரோஜாக்கள் தேவை. அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சதுர வடிவில் இருக்கும் வெள்ளை துணியும் தேவை. இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்தால், ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும். எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் குல தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் போது பரிகாரம் இன்னும் முழு பலனை தரும்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு தாம்பூல தட்டின் மேல் வெள்ளை துணியை விரித்து, அதன் நடுவே அந்த 5 ரோஜாக்களை வைத்து விட்டு, இறைவனிடம் மனம் உருகி உங்களுடைய வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கடன் பிரச்சனையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். (சிலருக்கு பல பேரிடம் வாங்கிய கடன் தொல்லை இருக்கும். ஒவ்வொரு கடன் தீர ஒவ்வொரு முறை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.) அந்த கடனை சீக்கிரம் திருப்பி தர வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள்.

5 நிமிடம், 10 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி உண்மையாக இதை செய்ய வேண்டும். இந்த வேண்டுதல் உங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க போகின்றது. அவ்வளவுதான். நேர்மறையான இந்த பிரார்த்தனையை செய்து முடித்துவிட்டு ரோஜாவை அந்த வெள்ளை துணியிலேயே மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த முடிச்சை அப்படியே கொண்டு போய் உங்கள் தலையை சுற்றி கடலில் போட்டு விட வேண்டும். சமுத்திரத்தில் இந்த ரோஜாவையும் வெள்ளை துணையையும் போடும்போது, உங்களை பிடித்த கஷ்டம், கடன் அனைத்தும் அந்த கடலோடு போய்விட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். கடல் இல்லை என்றால் ஏரி பெரிய அளவில் இருக்கும் நீர் நிலைகளிலும் இதை போடலாம். தண்ணீருக்கு பக்கத்தில் போகும்போது ஜாக்கிரதையாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்களுக்கு பக்கத்தில் நீர் நிலைகளே இல்லை எனும் பட்சத்தில் இதை கிணற்றில் போடலாம். அதுவும் இல்லை என்ற பட்சத்தில் ஊருக்கு ஒதுக்க பக்கமாக மரம் செடி கொடிகள் இருக்கக்கூடிய இடத்தில் போட்டு விடுங்கள். ஆனால் நீர் நிலைகளில் போடும்போது தான் இந்த பரிகாரத்திற்கு முழுமையான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த எண்ணெயில் சமைத்தால், வீட்டில் நிரந்தரமாக தங்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே ஓடிடும்.

எளிமையான இந்த பரிகாரத்தை ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை நம்பிக்கையோடு செய்தாலே கடனை திருப்பி அடிப்பதற்கு உண்டான வழிகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். பரிகாரத்தை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்கக் கூடாது. கடனை திருப்பிக் கொடுக்கக் கூடிய முயற்சிகளில் ஆர்வத்தோடு நீங்கள் ஈடுபட வேண்டும் என்ற தகவலையும் முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -