தினமும் இந்த எண்ணெயில் சமைத்தால், வீட்டில் நிரந்தரமாக தங்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே ஓடிடும்.

chevvai
- Advertisement -

வீட்டில் அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டு, நம்மை தொல்லை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் தான் கடன். என்னதான் கஷ்டப்பட்டாலும் இந்த கடனை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியவில்லை. கடனால் நிம்மதியை இழந்து சந்தோஷத்தை இழந்து தவிப்பவர்களுக்கு இந்த குறிப்பு. எளிமையான முறையில் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்தாலே போதும். வீட்டில் இருக்கும் கடன் அலறி அடித்து வெளியே ஓடிவிடும். அது என்ன விஷயம் தலைப்பை படித்த உடனேயே உங்களுக்கு தெரிந்திருக்கும். தினமும் வீட்டில் இந்த எண்ணெயில் சமைத்தாலே போதும், இந்த வாசத்திற்கு வீட்டில் தங்கி இருக்கும் கடன் வெளியே ஓடிவிடும். அது எந்த எண்ணெய் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். கழுத்தை நெறுக்கும் கடன் பிரச்சனையில் இருந்து கலக்கம் இல்லாமல் வெளி வந்து விடலாம்.

கடன் பிரச்சனையை தீர்க்கும் சமையல் எண்ணெய்:
முதலில் அது எந்த எண்ணெய் என்று தெரிந்து கொள்வோம். பிறகு அதற்கு உண்டான காரணத்தையும் தெரிந்து கொள்வோம். நீங்கள் தினமும் வீட்டில் சமைக்க வேண்டிய எண்ணெய், கடுகு எண்ணெய். கடுகு எண்ணெயில் சமைத்தால் அதிக காரத் தன்மை வெளிப்படுமோ. சமையலின் ருசி மாறி விடுமோ என்றெல்லாம் பயப்படவே வேண்டாம். நிறைய வட மாநிலத்தவர்கள் இன்று இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்துகிறார்கள்.

- Advertisement -

சாதாரணமாக தாளிப்பது போல தினமும் 1 ஸ்பூன் எண்ணெய்யாவது சமையலில் நீங்கள் இந்த கடுகு எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கடுகு எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யும்போது, வெளிவரக்கூடிய அந்த வாசம் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் என்று சொல்லப்படக்கூடிய அந்த நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றுவதற்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கு பின்னால் ஒரு ஜோதிட ரகசியமும் இருக்குது கடுகு என்பது செவ்வாயின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. கடுகு எண்ணெயை சமையலறையில் தினமும் பயன்படுத்தினால் செவ்வாய் பகவான் நம்முடைய வீட்டில் வலுப்பெறுகிறார்.

பணத்தை கடனாக கொடுத்து வசூல் செய்ய முடியாதவர்களும் இதை செய்யலாம். கடனை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்க முடியாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வர நிச்சயமாக பண பிரச்சனைகளுக்கு உண்டான ஒரு விடிவுகாலம் சீக்கிரம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

அது மட்டும் இல்லைங்க. உங்களுக்கு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, அடிக்கடி வண்டியில் இருந்து விழுந்து அடிபடுகிறது, விபத்து நடக்கிறது என்பவர்கள் மாதம் ஒருமுறை கொஞ்சமாக கடுகு எண்ணெயை உடல் முழுவதும் பூசி குளித்தால் அப்போதும் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய தடை உங்கள் பக்கம் நெருங்கவே நெருங்காது.

கடுகு எண்ணெய்க்கு பின்னால் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கிறதா. ஆமாங்க ஒருவேளை உங்கள் வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த கடுகு எண்ணெயில் சமைத்துக் கொடுக்கலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை அணுகி விட்டு பிறகு நீங்கள் இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். நிறைய வேண்டாம் தினமும் சட்னி தாளிக்க 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் பயன்படுத்தினாலும் அது உங்கள் குடும்பத்திற்கு பல வகையில் நன்மையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -