ஒரே 1 விளக்கு போதும். இந்த விளக்கு எரிந்து முடியும் நேரத்தில் உங்களுடைய கடன் கரைந்து போய் இருக்கும்.

cash-deepam-vilakku
- Advertisement -

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அயராது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். சில பேரால் வட்டியை கூட திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பில் வைத்து, எப்படியாவது கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள். வருமானம் போதவில்லை என்றால், அதிகப்படியான வருமானம் எதில் கிடைக்குமோ அந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்வது சிறப்பு. கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு எவ்வளவு தொகையை கடனாக வாங்க வேண்டுமோ, அவ்வளவு தொகையை மட்டும் அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டும். தகுதிக்கும் மீறிய கடனை ஒருபோதும் கைநீட்டி வாங்கி விட கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தகுதிக்கு மீறிய கடன் நம் சந்தோஷத்தை அழித்து விடும்.

கெட்ட நேரம் கடனை வாங்கி விட்டோம். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை என்ன செய்வது. இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்து பாருங்களேன். இறைவனை நம்பி நீங்கள் ஏற்றக்கூடிய இந்த ஒரு தீபம் உங்களுடைய பண கஷ்டத்தைப் போக்கி, கடன் சுமையை குறைக்கும். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று எப்போது இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்ற முடியுமோ அப்போது ஏற்றலாம்.

- Advertisement -

பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயில் கொஞ்சம் மருதாணி விதையை போட்டுக் கொள்ளுங்கள். டைமண்ட் கற்கண்டு 2 போட்டு, தாமரை தண்டு திரி போட்டு, தீபம் ஏற்றி பூஜை அறையில் வைத்து விளக்கிற்கு முன்பு அமர்ந்து வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றி வைக்கக்கூடிய இந்த விளக்கிற்கு வேண்டிய வரத்தை உடனே கொடுக்கக் கூடிய சக்தியும் லட்சுமி கடாட்சமும் உள்ளது. வருமானமே இல்லாமல் கஷ்டப்படும் உங்களுக்கு வருமானம் பெருகும். பிறகு கடனை அடைப்பதற்கு தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

எத்தனை வாரங்கள் இந்த தீப வழிபாட்டை பின்பற்றுவது. உங்களுடைய கடன் தீரும் வரை செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களும் இந்த விளக்கை ஏற்றலாம். கைநீட்டி கடன் வாங்கிய அந்த குறிப்பிட்ட நபரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குறிப்பாக கடனை கைநீட்டி வாங்கிய அந்த நபர் இந்த தீபத்தை ஏற்றி விளக்கிக்கு முன்பு அமர்ந்து வழிபாடு செய்வது சிறப்பாக இருக்கும்.

வாரம் தோறும் எண்ணெய்க்கு உள்ளே இருக்கும் மருதாணி விதைகளை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். மறுவாரம் விளக்கேற்றும் போது புதிய மருதாணி விதைகளை எண்ணெயில் போட வேண்டும். அதே மண் அகல் விளக்கை சுத்தமாக துடைத்துவிட்டு மீண்டும் அடுத்த வாரம் தீபம் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். வாரம் வாரம் கட்டாயமாக திரியை மாற்ற வேண்டும். குலதெய்வத்தை வேண்டி இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு.

நம்பிக்கையுடன் செய்யுங்கள். இந்த விளக்கு முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்யும் போது மனதில் ஒரு துளி சந்தேகமும் எழக்கூடாது. நிச்சயம் நம்முடைய கடன் அடைந்து விடும் என்ற உறுதியுடன் வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -