16 நாட்கள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனும் சீக்கிரத்தில் காணாமல் போகும்.

gajalakshmi-cash
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் சுபிட்சம் நிலைத்து இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். செல்வம் நம் கையை விட்டு நழுவி வெளியே செல்லக்கூடாது. செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு கைமேல் பலன் கிடைக்க வேண்டும். கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக கூடிய சீக்கிரத்தில் வெளிவர வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய சில சாஸ்திர ரீதியான குறிப்புகள் இந்த பதிவின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பயன்பெறலாம்.

கொடுக்கல் வாங்கலில் எப்போதுமே நாம் புதன் கிழமையை கணக்கு வைத்துக் கொள்வது கிடையாது. ஏதாவது ஒரு பொருளாக இருக்கட்டும், பணம் ஆக இருக்கட்டும் புதன்கிழமை கொடுக்கலாம் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புதன்கிழமை அன்று உங்களுடைய வீட்டிலிருந்து ஆடை, ஆபரணங்கள், பொன், பொருட்கள் இப்படி லட்சுமி கடாட்சம் நிறைந்த எந்த ஒரு பொருளையும் அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலட்சுமி அடுத்தவர்களிடம் சென்று விடுவார்கள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்து வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் வீட்டிலிருந்து தானியத்தை அடுத்தவர்களுக்கு இனாமாக கொடுக்கக்கூடாது. அதாவது நெல், அரிசி, கோதுமை போன்ற எந்த உணவுப் பண்டங்களும் இனாமாக உங்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சில பேர் நிறைய பரிகாரங்கள் செய்வார்கள். நம்பிக்கையோடு தான் செய்வார்கள். ஆனால் அந்த பரிகாரத்தில் அவர்களுக்கு பலன் கிடைக்காது. காரணம் என்னவாக இருக்கும் நீங்கள் தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருட்களை அணிந்து உள்ளீர்களா என்று பாருங்கள். குறிப்பாக லெதேர் பெல்ட், லெதர் பர்ஸ், லெதர் செருப்பு இவைகளை அணிந்து கொண்டு பரிகாரம் செய்யக் கூடாது. பரிகாரம் செய்யும் போது செருப்பு அணிய மாட்டோம். இருப்பினும் செருப்பு போட்டுக்கொண்டு தானே கோவிலுக்கு செல்வோம். இதில் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். லெதர் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களை அணிந்து பரிகாரம் செய்தாலும் அந்த பரிகாரத்திற்கு பலன் நிச்சயம் கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடன் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு 16 நாட்கள் தொடர்ந்து கொள்ளு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அங்கு இருக்கும் குருக்களிடம் தானம் கொடுக்கலாம். கொள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு தானம் செய்கிறோமோ அவ்வளவுக்கு அளவு கடன் குறையும் என்பது நம்பிக்கை.

சில பேர் வீட்டில் திடீரென்று என்னவென்றே தெரியாமல் கஷ்டங்கள் தொடர்ந்து வரத்தொடங்கும். கேட்கும் ஒரு செய்தி கூட நல்ல செய்தியாக இருக்காது. வீடு பீடை பிடித்த மாதிரி மாறிவிடும். தொடர்ந்து 48 நாட்களுக்கு தினம்தோறும் வீட்டில் கோமியத்தை தெளித்து வந்தால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

- Advertisement -