கடனை திருப்பித் தர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

vasambu
- Advertisement -

கடனை வாங்கும் போது சுலபமாக கைநீட்டி வாங்கி விடுவோம். ஆனால் அந்த கடனை திருப்பித் தரும்போது தான், பிரச்சனையே ஆரம்பிக்க தொடங்கும். கை நீட்டி வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு வழியே இருக்காது. வரக்கூடிய வருமானம் வீட்டு செலவுக்கு பத்தாது. வாங்கிய கடனை எப்படி திருப்பித் தருவது, கடனை வாங்குவதற்கு முன்பாக இதை யோசித்து இருக்க வேண்டும்.

சரி அவசர தேவை. கடன் வாங்கி விட்டோம். அதை இப்போது திருப்பித் தர முடியவில்லை என்ன செய்வது. மூன்று வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கடனை திருப்பி அடைப்பதற்கு உண்டான வழியை இந்த பரிகாரம் காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

கடனை சீக்கிரம் திருப்பி அடைக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் வசம்பு பொடி. நாட்டு மருந்து கடைகளில் போய் கேட்டாலே இது கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும். சனிக்கிழமை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஒரு வெள்ளை பேப்பரை கையில் எடுத்துக்கோங்க.

கருப்பு நிற பேனாவில் அந்த பேப்பரில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை எழுதி, அந்த கடனை அந்த நபருக்கு சீக்கிரம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுதி விடுங்கள். அந்த பேப்பருக்கு நடுவே 1 ஸ்பூன் வசம்பு பொடியை வைத்து, சின்ன பொட்டலமாக மடித்து விடுங்கள். தயார் செய்த இந்த பொட்டலத்தை ஒரு டப்பாவில் போட்டு மூடிடுங்க.

- Advertisement -

பிளாஸ்டிக் டப்பாக்கள் வீட்டில் எத்தனையோ இருக்கும். ஒரு டீ தூள் டப்பா இருந்தால் கூட போதும். அதை நன்றாக கழுவி காய வைத்து விட்டு அதன் உள்ளே இந்த பேப்பர் பொட்டலத்தை போட்டு மூடி வையுங்கள். இந்த வாரம் சனிக்கிழமை காலை இந்த பரிகாரத்தை செய்து விட்டீர்கள். அடுத்த வாரம் சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த டப்பாவில் இருக்கும் அந்த பொட்டலத்தை எடுத்து பிரிக்கக் கூடாது.

அதன் மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து கொளுத்தி விடுங்கள். இந்த கற்பூரத்திற்கு முன்பாக அமர்ந்து உங்கள் கடன் காணாமல் போய்விட வேண்டும். கடன் தொகை எல்லாம் சீக்கிரம் திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். இதே போல மூன்று வாரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு வாரம் இந்த பொட்டலத்தை மடித்து வைக்க வேண்டும். அடுத்த வாரம் அந்த பொட்டலத்தை கற்பூரம் வைத்து எரிக்க வேண்டும். மூன்று முறை, இதை செய்ய வேண்டும் என்றால், ஆறு வாரங்கள் உங்களுக்கு பரிகாரம் செய்வதற்கான நாட்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புரிந்ததா?

இதையும் படிக்கலாமே: கொடி மர வழிபாடு

கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். 6 வாரம் முடிந்த பிறகு நிச்சயம் உங்கள் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான வழியை இந்த பரிகாரம் காட்டிக் கொடுத்து விடும். கவலையே படாதீங்க. சீக்கிரம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -