நல்ல காரியத்துக்கு கடன் வாங்கும் போது இந்த பொருளை கையில் கொண்டு போங்க. கேட்ட கடன் உடனே கிடைக்கும். எல்லாம் மங்களகரமாக நடக்கும்.

cash-amman
- Advertisement -

என்னங்க இது. கடனையே வாங்க கூடாது என்று நினைக்கின்றோம். கடன் வாங்க போகும்போது எடுத்து செல்ல வேண்டிய பொருளை பரிகாரமாக பதிவில் படிப்பதா? என்று யோசிக்காதீங்க. நிறைய நல்ல காரியம் இன்று, கடன் வாங்கி தான் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இன்றைய சூழ்நிலை, மொத்தமாக நடுத்தர வர்க்கத்தினர் கையில் பணம் கிடையாது. சொந்த வீடு கட்டுவதாக இருந்தாலும்,  பிள்ளைக்கு திருமணம் நடப்பதாக இருந்தாலும், அல்லது கல்வி செலவுக்காக, மேல் படிப்புக்காக பணம் கட்ட வேண்டியதாக இருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு பொருளை அடமானம் வைத்தோ, அல்லது யாரிடம் ஆவது கடன் வாங்கியோ, அல்லது வங்கி கடன் வாங்கியோ தான் பணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலை.

பிறகு வரக்கூடிய வருமானத்தை வைத்து அந்த கடனை மாதம் தோறும் திருப்பி கட்டப் போகின்றோம். இது இயல்பான ஒரு விஷயம் ஆகிவிட்டது. ஆனால் தகுதிக்கு மீறிய கடனை யாரும் வாங்கக்கூடாது. உங்களுக்கு மாதம் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வருமானம் வருகிறது. மாதம் 5000 அல்லது 7000, பத்தாயிரம் கூட கடன் கட்ட முடியும் என்றால், உங்களுடைய தகுதிக்கு தகுந்தபடி 1 லட்சம் அல்லது 2 லட்சம் ரூபாயை கடன் வாங்குங்கள். உங்களுடைய வருமானத்திற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வாங்குவது என்பது ரொம்ப ரொம்ப அதிகமான தொகை. தேவையான பணம் கிடைக்க வேண்டும். கடன் வாங்க போறீங்க. அது சுபமாக முடிய வேண்டும் என்றால் எந்த பொருளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

கடன் வாங்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்:
மஞ்சள். இது மங்களகரத்திற்கே உரிய ஒரு பொருள். குரு பகவானுக்கு உரிய ஒரு பொருள். ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக கடன் வாங்க போறீர்கள் அப்படி என்றால், ஒரு மஞ்சள் துணியில் 3 மஞ்சள் கிழங்குகளை வைத்து, குலதெய்வத்தை மனதில் நினைத்து குலதெய்வத்தின் பெயரை சொல்லி, முடிச்சு போட்டு கூடவே எடுத்துச் செல்லுங்கள்.

இன்னைக்கு பேங்கில் லோன் அப்ளை செய்ய போறீங்க. கையில் அந்த மஞ்சளை கொண்டு போங்கள். பத்து நாள் கழித்து ஏதோ ஒரு என்கொயரிக்கு பேங்குக்கு கூப்பிடுறாங்க. அப்பவும் அதே மஞ்சலை கையில் எடுத்துச் செல்லுங்கள். ஒரு சில நாட்கள் கழித்து கடன் கிடைக்கப் போகிறது. பணத்தை உங்கள் அக்கவுண்டில் சேர்க்கப் போகிறீர்கள் என்றாலும் கையில் அந்த மஞ்சளை எடுத்து செல்லுங்கள். (மஞ்சளை மாற்ற வேண்டாம் அதே மஞ்சளை எடுத்துச் சென்றால் போதும்.)

- Advertisement -

சில பேருக்கு மஞ்சளை எடுத்து சென்றாலும் அந்த காரியத்தில் ஏதோ ஒரு தடை உண்டாகும். அப்போது பரிகாரம் பலிக்கவில்லை என்று அர்த்தமா. கிடையாது. அந்த கடன் தொகை வாங்குவதன் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது. கடவுள் உங்களுக்கு அதை வரவிடாமல் இப்போதே தடுக்கின்றார் என்று அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செய்யும் இடத்தில் கண்ணாடியில் இதை வரைந்து வைத்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் அதிக லாபத்தையும் பெற்று விரைவில் பெரிய தொழிலதிபர் ஆகும் யோகத்தை பெறலாம்.

குண்டு மஞ்சள் தாங்க. மூன்றே மூன்று மஞ்சள் போதும். உங்களுடைய பண பிரச்சனையை சரி செய்வதற்கு கடன் வாங்குவது தவறு தான். கடன் வாங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தவில்லை. இருப்பினும் சமய சந்தர்ப்பம், சூழ்நிலைக்காக கடன் வாங்குபவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம். அது மட்டும் இல்லாமல் வேறு ஏதாவது நல்ல விசேஷத்திற்கு செல்கிறீர்கள். அது சக்சஸ்ஃபுல்லாக மாற வேண்டும் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருக்கிறது என்றாலும் இந்த மூன்று மஞ்சள் கிழங்குகளை கையோடு எடுத்துச் சென்றால் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

- Advertisement -