கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்

kodutha panam thirumba vara
- Advertisement -

பணப்பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் தங்களுடைய கஷ்டத்தை தீர்ப்பதற்காக பிறரிடம் இருந்து பணத்தை கடனாக வாங்குவார்கள். வட்டியாக வாங்கினாலும் சரி கைமாற்றாக வாங்கினாலும் சரி அதை உடனே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் இருப்பார்கள். அதற்கு மாறாக ஒரு சிலர் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக வாங்கவும் செய்வார்கள்.

கொடுக்கும் நபருக்கு இவர் ஏமாற்றுவாரா? திரும்பி கொடுத்து விடுவாரா? என்பது தெரியாத சூழ்நிலையில் தவறான நபருக்கு பணத்தை கொடுத்து விட்டு அந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது எந்த பரிகாரத்தை செய்தால் அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பணம் பத்தும் செய்யும் என்பது அனுபவரீதியாக நாம் அனைவரும் கண்ட உண்மைதான். ஒருவருடைய வாழ்க்கையில் பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளில் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டு இருப்போம். ஒரு ரூபாயை பத்து ரூபாயாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் தங்களுடைய பணத்தை கடனாக கொடுக்க முன்வருவார்கள். இப்படி கொடுக்கும் அனைத்து பணமும் திரும்ப கிடைத்து விடுமா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏமாற்றும் எண்ணத்திலோ அல்லது கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையிலோ பலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் திரும்ப பணத்தைக் கொடுப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம்.

இந்த பரிகாரத்தை தேய்பிறை நாட்களில் தான் செய்ய வேண்டும். அதாவது பௌர்ணமி முடிந்து வரும் நாட்களில் அமாவாசை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்த பரிகாரத்திற்கு பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு அரச மர இலை வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

- Advertisement -

அரசமர இலையை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் உங்களுடைய பணத்தை யார் தராமல் இருக்கிறார்களோ அவர்களுடைய பெயரை எழுதிக் கொள்ளுங்கள். பிறகு அந்த இலையில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், புதிதாக வாங்கிய கல் உப்பில் சிறிதளவு வைத்து அந்த இலையை நன்றாக கட்டி விடுங்கள். கட்டிய இந்த இலையை ஆற்றில் விட வேண்டும்.

ஆறு கிடைக்காத பட்சத்தில் கடலில் விடலாம். ஆறு, கடல் என்று எதுவும் இல்லை என்பவர்கள் குளத்தில் இந்த இலையை கொண்டு போய் போட வேண்டும். இவ்வாறு போடுவதற்கு முன்பாக இந்த இலையை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் மனதார வழிபட்டு அந்த நபர் திரும்ப உங்களிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து விட்டு பிறகு இந்த இலையை தண்ணீரில் போட வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். முதல் வாரம் எந்த கிழமையில் செய்ய ஆரம்பிக்கிறோமோ அதே கிழமையில் தான் ஒன்பது வாரங்களும் செய்ய வேண்டும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து தேய்பிறை வராதே. எத்தனை வாரங்கள் தேய்பிறையில் வருகிறதோ அத்தனை வாரங்கள் செய்து விட்டு மறுபடியும் தேய்பிறை வரும்வரை பொறுத்திருந்து பிறகு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் துயரங்கள் தீர வழிபாடு

பெரிதும் செலவில்லாமல் எளிமையாக செய்யக்கூடிய இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -