இந்த டப்பாவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் 5 ரூபாயை மறைத்து வைத்தால், மின்னல் வேகத்தில் பணம் சேரும்.

lakshmi-5-rupee-coin
- Advertisement -

எந்த ஒரு மந்திரமும் சொல்ல வேண்டாம். விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம். பரிகார பூஜை எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் பணத்தை ஈர்க்கலாம். வசியம் செய்யலாம். நிறைய பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு தாந்திரீகத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்முடைய தந்திரத்தால் நாம் செய்யக்கூடிய வேலையின் மூலம், அதிக லாபம் கிடைக்கும். அதற்காக செய்யக்கூடிய தந்திரமான பரிகாரங்களை தாந்த்ரீக பரிகாரங்கள் ஆகும். எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பணத்தை ஈர்க்கும் இந்த தாந்திரீக வித்தையை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் உள்ளதா. வாங்க பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

கடகடவென பணத்தை சேர்க்க கடுகு டப்பா தாந்திரீக பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் 100 கிராம் கடுகு. (நீங்கள் எடுக்கும் டப்பாவின் அளவை பொறுத்து இதை 150 கிராம் 200 கிராம் என்று அதிகப்படுத்தி கொள்ளலாம் தவறு கிடையாது). சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கடுகு தான். ஒரு சிறிய உண்டியல் அல்லது சிறிய டப்பா உங்கள் சகோதரியம் போல எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிளாஸ்டிக் சில்வர் எந்த வகையில் உள்ள டப்பாவை வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தலாம். உண்டியலாக இருந்தால் இந்த சாவி போட்டு பூட்டி வைப்பார்கள் அல்லவா அந்த உண்டியலை பயன்படுத்துங்கள். (அப்போதுதான் உள்ளே போட்ட காசை சுலபமாக வெளியே எடுக்க முடியும்.)

எந்த டப்பாவாக இருந்தாலும் முதலில் அதில் கடுகு போட வேண்டும். கடுகுக்கு உள்ளே வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை இந்த இரண்டு நாட்களில் ஐந்து ரூபாய் நாணயத்தை புதைத்து வையுங்கள். (எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஐந்து ரூபாயை இந்த கடுகு டப்பாவுக்குள் போடலாம். ஆண்களும் போடலாம். பெண்களும் போடலாம் இதற்கு எந்த தீட்டும் தடையில்லை). டப்பாவை திறந்து பார்த்தால் நாணயம் யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது. கடுகு தான் தெரிய வேண்டும். அதேபோல இந்த பரிகாரத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை அடுத்தவர்களிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவே கூடாது. இந்த ரெண்டு ரகசியம் மட்டும் தான் இந்த பரிகாரத்தில் மிக மிக முக்கியம்.

- Advertisement -

ஒரு வாரத்திற்கு இரண்டு நாள். நான்கு வாரத்திற்கு அதன் உள்ளே, எட்டு, 5 ரூபாய் நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதாவது ஒரு மாதம் இந்த கடுகு டப்பாவுக்குள் நாணயங்களை போட்டு வருவீர்கள். ஒரு மாதம் முடிந்ததும் அந்த கடுகு டப்பாவுக்கு உள்ளே இருக்கும் ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து நீங்கள் தான தர்ம காரியத்திற்கு செலவு செய்ய வேண்டும்.

மொத்தமாக 40 ரூபாய்க்கும் உணவு பண்டங்களாக வாங்கி தானம் செய்தாலும் சரி. அப்படி இல்லை என்றால் ஐந்து ரூபாயாக ஒவ்வொருவருக்கு தானமாக கொடுத்து விட்டாலும் சரி, இப்படி ஐந்து ரூபாயை கடுகு டப்பாவில் போட்டு வைத்துவிட்டு தானத்திற்காக நீங்கள் பயன்படுத்தினால் உங்களுடைய வீட்டில் ஐந்து மடங்கு அதிவேகமாக பணம் சேர தொடங்கும்.

- Advertisement -

கடுகுக்கு நல்லதை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. அந்த டப்பாவில் பணத்தை போட்டு வைத்தால் பணத்தை ஈர்த்துக் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கும். அதே பணத்தை நீங்கள் தானமாக செய்யும்போது அதற்கான பலன் பல மடங்காக உங்கள் கையை வந்து சேரும். இதுதான் இந்த பரிகாரத்தின் சூட்சமம், ஆனால் நீங்கள் தானம் செய்யக் கூடிய வேலையை இந்த வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் செய்யக்கூடாது மற்ற நாட்களில் தான் செய்ய வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் பழைய கடுகை எல்லாம் தண்ணீரில் கொட்டி அந்த தண்ணீரை அப்படியே செடிகொடிகள் முள் புதர் இருக்கும் இடமாக பார்த்து கொட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும். பல தலைமுறை தொடரும் பித்ரு சாபம் விலகி, உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.

இந்த மூன்று மாதத்திலேயே உங்களுடைய நிதி நிலைமையில் நல்ல வித்தியாசம் தெரியும். பிறகு யார் சொன்னாலும் நீங்கள் இந்த பரிகாரத்தை விட மாட்டீங்க. செஞ்சுக்கிட்டே இருப்பீங்க. அந்த அளவுக்கு பாசிட்டிவ் எனர்ஜி உங்களிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -